சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே விளாசல்
மும்பை, ஜூலை 31 - திரௌபதி துகிலுரியப்பட்ட போது திருதராஷ்டிரன் எவ்வாறு செயலற்றவராக இருந்தாரோ, அது போன்றுதான் இன்று பிரதமர் நரேந்திர மோடி நவீன திருதராஷ்டிர னாக மாறியிருக்கிறார் என்று மகா ராஷ்டிர முன்னாள் முதல்வரும், சிவசேனா (யுபிடி) தலைவருமான உத்தவ் தாக்கரே விமர்சித்துள் ளார். மகாராஷ்டிரா மாநிலம் தானே-வில் நடைபெற்ற கூட்டத்தில் பேசு கையில், இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: பாஜக-வின் பிரித்தாளும் அர சியல் வலையில் சிக்கிவிடக் கூடாது. தேர்தல் வரப்போகிறது. அவர்கள் இப்போது உங்களை (மக்களை) முட்டாளாக்க முயற்சிப் பார்கள். சண்டையை தொடங்கு வார்கள். 2024 ரயிலை (தேர்தலை) தவறவிட்டால், இப்போது அல்லது எப்போதுமே அதனைப் பிடிக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த பயனற்ற வர்களை மீண்டும் ஆட்சிக்கு வர விடாதீர்கள். பாஜக மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தால், அவர்கள் ஏன் இப்படி கட்சிகளை உடைக்கிறார்கள்? அவர்களுக்கு தன்னம்பிக்கை இல்லை என்பது எனக்கு தெரியும். 2024-இல் எதிர்க்கட்சி கூட்டணி பாஜக-வை ஆட்சியிலிருந்து அகற்றும்.
மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி கவலைப்படாத பாஜக-வின் இந்துத்துவா தவ றானது. விஸ்வகுருவின் ஆட்சி யில் நம்நாட்டில் பெண்கள் பாலி யல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்ற னர். அவர்களை யார் காப்பாற்று வார்கள்? திரௌபதி துன்புறுத்தப் பட்டபோது, மன்னன் திருத ராஷ்டிரன் பார்வையற்றவராக அமர்ந்திருந்தார், அவர் தடுப்ப தற்கு எதுவும் செய்யவில்லை. இன்று நமது அரசனும் (மோடி) ஒன்றும் செய்யவில்லை. இது போன்ற பல சம்பவங்கள் நடந்துள் ளதாக அவர் கூறுகிறார். உண்மை யில் இதுபோன்ற சம்பவங் களுக்காக அவர் வெட்கப் பட்டிருக்க வேண்டும். மணிப்பூரில் அமைதியை விரும் பினால், உங்கள் (பாஜகவின்) ஏஜென்சிகளான அமலாக்கத் துறை, சிபிஐ மற்றும் வருமான வரித் துறை போன்றவற்றை அங்கு அனுப்புங்கள். ஒருவேளை அது அமைதியை மீட்டெடுக்கும். அமித் ஷா-வும் அங்கு செல்ல வேண்டும். பாஜக தனது சொந்த வச திக்கேற்ப சட்டங்களை வடிவமைக் கிறது. கொரோனா காலத்தில் என்ன நடந்தது, கங்கை சுடு காட்டில் உடல்கள் எப்படி எரிக்கப் பட்டன என்பதை நீங்கள் பார்த்தீர் கள். மகாராஷ்டிராவில் இது போன்ற சம்பவங்கள் நடக்க வில்லை. எங்கள் கூட்டணியான ‘இந்தி யா’வை (ஐ.சூ.னு.ஐ.ஹ.) பிரதமர் மோடி குற்றம் சாட்டுகிறார். மோடி வெளிநாடுகளுக்கு செல்கிறார். அங்கு அவர் இந்திய பிரதமர் என்றுதான் அழைக்கப்படுகிறார். அப்படியென்றால் அவர் இந்தி யாவின் பிரதமரா? இந்திய முஜாகி தீன் பிரதமரா? என்று கேட்க லாமா?. எவ்வளவு மலிவான எண்ணம் அவருக்கு? இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசியுள்ளார்.