புதுதில்லி, மார்ச் 14- நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு திங்களன்று தொடங்கியது. கொரோனா பரவல் குறைந்து விட்ட நிலையில், இரு அவைகளும் காலை 11 மணிக்கு தொடங்கின. வருகிற ஏப்ரல் 8-ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. ஜம்மு - காஷ்மீருக்கான பட்ஜெட்டை நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட் குறித்து விவாதிக்க கூடுதல் அவகாசம் வேண்டுமென காங்கிரஸ் உறுப்பினர் மணீஷ் திவாரி உள்ளிட்ட சில உறுப்பினர்கள் வலியுறுத்தினர். தொடர்ந்து பேசிய அவர், மற்ற யூனியன் பிரதேசங் களின் பட்ஜெட் விவாதிக்கப்படாத நிலையில், ஜம்மு-காஷ்மீர் பட்ஜெட் ஏன் நாடாளு மன்றத்தில் விவாதிக்கப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பினார். சில உறுப்பினர்கள் பட்ஜெட் ஆவணங் களை ஆய்வு செய்ய போதிய அவகாசம் வழங்கப்படவில்லை என குற்றஞ்சாட்டினர். உறுப்பினர்களின் கருத்தை ஒரு பொருட்டா கக் கருதாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. திமுக உறுப்பினர் டி.ஆர். பாலு உக்ரை னில் இருந்து அழைத்துவரப்பட்ட மருத்துவ மாணவர்களுக்கு ஒன்றிய அரசு என்ன திட்டம் வைத்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்டு உக்ரைனில் இருந்து இந்தியா அழைத்து வரப்பட்ட மாணவர்கள் ரஷ்யாவில் படிப்பைத் தொடர முடியுமா என்று டி.ஆர்.பாலு கேள்வியெழுப்பினார். இதே கேள்வியை காங்கிரஸ் உறுப்பி னர் கௌரவ் கோகோய் எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் “ஒன்றிய அரசு அவர்களை அழைத்து வந்ததும், அவர்கள் எதிர்காலத்தில் மருத்துவர்களாக ஆவதற்கு தேவையான ஏற்பாடுகளை அரசாங்கம் பரிசீலிக்கும் என்று உறுதியளித்துள்ளோம். அரசு அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்றார்”.
12-14 வயது வரையிலானோருக்கு தடுப்பூசி
இந்தியாவில் 12 முதல் 14 வயது வரம்பில் உள்ள சிறார்களுக்கு நாளை மறுநாள் முதல் (புதன்கிழமை) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று ஒன்றிய அரசு தெரி வித்துள்ளது. அதேபோல், 60-வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு ள்ளதாகவும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச் சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.