states

ராகுல் விவகாரத்தில் சட்டத்தின் ஆட்சியை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்!

புதுதில்லி, மார்ச் 28- இந்திய நீதிமன்றங்களில் நடைபெறும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வழக்கை, தாங்கள் உன்னிப்பாக கவ னித்து வருவதாக அமெரிக்க வெளியுற வுத்துறையின் முதன்மை துணைச் செய்தித்  தொடர்பாளர் வேதாந்த் படேல் தெரிவித் துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்தார் என்பதற்காக, கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டு, அதன்பேரில் ராகுல் காந்  திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப் பட்டுள்ளது. அவரது எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயக விரோ தம், அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.  இந்நிலையில், அமெரிக்க வெளியு றவுத்துறை முதன்மைத் துணைச் செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் பேட்டி அளித்  துள்ளார். அதில், “சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை சுதந்திரத்திற்கு மதிப்பளிப்பது எந்தவொரு ஜனநாயக நாட்டின் அடிப்படை யாகும். அந்த வகையில், இந்திய நீதி மன்றங்களில் நடைபெறும் காங்கிரஸ் தலை வர் ராகுல் காந்தியின் வழக்கை அமெ ரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது.  

நாங்கள் ஜனநாயகக் கொள்கைகளின் முக்கி யத்துவத்தையும், கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட மனித உரிமைகளைப் பாதுகாப்ப தையும் எங்கள் இரு நாடுகளின் ஜனநாய கங்களையும் வலுப்படுத்துவதற்கான திறவு கோலாகத் தொடர்ந்து முன்னிலைப்படுத்தி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார். “இந்தியாவுடன் அமெரிக்கா இந்த விவ காரத்தில் தொடர்பில் உள்ளதா? அல்லது  ராகுல் காந்தியை தொடர்பு கொள்கிறதா..?”  என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள் விக்கு, “குறிப்பிட்டு சொல்லும்படியான எந்த  தொடர்பும் இல்லை... ஆனால் எங்களுடன்  நட்பில் உள்ள நாடுகளுடன் எதிர்க்கட்சி  உறுப்பினர்களுடன் எப்படி செயல்படு வோமோ அந்த அளவிற்கே பரஸ்பரம் இயல்  பான அளவிலேயே தொடர்பு இருக்கிறது என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல  முடியும். மற்றபடி குறிப்பிட்டு சொல்லும்படி யான எந்த சிறப்பு ஈடுபாடும் இல்லை” என்றும் வேதாந்த் படேல் கூறியுள்ளார்.