states

மரண தண்டனை கொடூரமானதா என்ற விவாதம் நடத்துவது பற்றி ஆலோசிக்க வேண்டும்!

புதுதில்லி, மார்ச் 23 - தூக்குத் தண்டனை கொடூரமானதா? என்பது குறித்து விவாதம் நடத்துமாறு ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மரண தண்டனையை நிறைவேற்ற, வலி குறைந்த மாற்று வழி ஏதாவது இருக் கிறதா? என்பது குறித்து ஆராயவும் உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மரண தண்டனையை தூக்குத் தண்டனை யாக நிறைவேற்றாமல் வேறு வழிகளில் நிறை வேற்ற உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு செவ்வா யன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்கறிஞர் ரிஷி மல் ஹோத்ரா, சட்ட ஆணையத்தின் அறிக்கை ஒன்றை படித்துக் காட்டினார். அதில் இந்தியா வில் நிறைவேற்றப்படும் மரண தண்டனை யானது மிகவும் கொடூரமானது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளதை ரிஷி மல்ஹோத்ரா சுட்டிக்காட்டினார். இதையடுத்து இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “நாட்டில் நிறைவேற்றப்படும் மரண தண்டனை என்பது தூக்குத் தண்டனையாகும். இது மிகவும்  கொடூரமானதா என்பது தொடர்பாக விவாதம் நடத்துவது பற்றி ஒன்றிய அரசு ஆலோசிக்க வேண்டும். மேலும் மரண தண்டனையை, குறைந்த வலியுடன் நிறைவேற்றுவதற்கான மாற்று வழிகள் உள்ளனவா என்பது குறித்தும் ஒன்றிய அரசு தீவிரமாக பரிசீலிக்கவேண்டும். இதுதொடர்பாக விவாதம் நடத்தி, தகவல்களை சேகரிக்க வேண்டும். இந்த விவரங்களைச் சேக ரித்து நீதிமன்றத்தில் ஆவணமாக தாக்கல் செய்ய அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கட ரமணிக்கு உத்தரவிடுகிறேன்” என்று தெரிவித்தார். அத்துடன் வழக்கையும் மே 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.