“சட்டப்பிரிவு 167(பி)-யின்படி, ஆளுநர் மாநில அரசிடம் தகவல்களை அளிக்குமாறு கேட்டால் - மாநில அரசு அவருக்கு அதைவழங்கக் கடமைப்பட்டிருக்கிறது. அரசின் செயலர்களில் ஒருவர் மூலம் பதிலளிக்கச் சொல்லலாம். அதேநேரத்தில், பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என்று அமைச்சரவை கூறுகிறது என்றால், சட்டப்பேரவையைக் கூட்டுவதற்கு ஆளுநர் கடமைப்பட்டவர்.
புதுதில்லி, பிப். 28 - மாநில அமைச்சரவை கூறினால், சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டி யது ஆளுநர்களின் கடமை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டவர்களே ஆளுநர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது. பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரி லால் புரோகித், பகவந்த் மான் தலைமையிலான அம்மாநில ஆம் ஆத்மி அரசிடம் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறார். அண்மையில் பஞ்சாப் மாநில ஆசிரியர்கள் சிங்கப்பூருக்கு பயிற்சிக் காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த ஆசிரியர்கள் தேர்வு குறித்து தமக்கு விளக்கம் தர வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் பகவந்த் மானுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். ஆனால் முதல்வர் பகவந்த் மான், ஒன்றிய அரசால் நிய மிக்கப்பட்டவர்தான் ஆளுநர். ஆகை யால் ஆளுநருக்கு மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட முதல்வர் பதிலளிக்க முடியாது என திட்டவட்டமாக கூறி யிருந்தார். எனினும், 15 நாட்களுக்குள் பதில் தர வேண்டும்; இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டிய நிலையில், “3 கோடி பஞ்சாப் மக்களுக்குதான் பதிலளிக்க கட மைப்பட்டுள்ளோம். ஒன்றிய அரசின் நியமன ஆளுநருக்கு அல்ல”என்றார்.
இந்நிலையில் பஞ்சாப் மாநில சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரை மார்ச் 3-ஆம் தேதி கூட்டு வதற்கு பகவந்த் மான் அரசு முடிவு செய்தது. இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தன. ஆனால் ஆளு நர் பன்வாரிலால் புரோகித், இதுவரை சட்டப்பேரவையைக் கூட்டுவதற்கான அனுமதியை வழங்கவில்லை. இதுதொடர்பாக பஞ்சாப் அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. செவ்வாயன்று காலை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், பி.எஸ். நரசிம்மா அமர்வில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டாக்டர் அபிஷேக் மனு சிங்வி, பஞ்சாப் அரசின் மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். அவரின் கோரிக்கை யை ஏற்று, பிற்பகல் 3.50 மணிக்கு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்படி தலைமை நீதிபதி அமர்வு பிற்பகலில் கூடியபோது, “ஆளுநர் அரசியல் சாசனப்படி செயல்பட வேண்டும். தன் விருப்பப்படி நடந்து கொண்டால் பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்ட முடியாது. பட்ஜெட் கூட்டத் தொடரின் அர்த்தம் அவருக்கு புரி கிறதா, என்றே தெரியவில்லை?” என அபிஷேக் மனு சிங்வி காட்டமாக குறிப்பிட்டார். அப்போது, பஞ்சாப் ஆளுநர் தரப்பில் ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பதில் மனு தாக்கல் செய்தார். அதில், “பஞ்சாப் சட்டப்பேரவையை மார்ச் 3-ஆம் தேதி கூட்டுவதற்கு அழைப்பு விடுத்திருக் கிறார்” என்ற தகவலை தெரிவித்தார். இதனை ஏற்று வழக்கை முடித்துக் கொள்ள வேண்டும் என்பதாக அவரது வாதம் இருந்தது.
அதற்கு, “பஞ்சாப் அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகிய பிறகு, ஆளுநர் இப்போது சட்டப்பேரவை யைக் கூட்ட ஒப்புக் கொண்டிருக்கிறார். இவ்வாறுதான் ஆளுநர் செயல்படு வாரா?” என்று அபிஷேக் மனு சிங்வி கேள்வி எழுப்பினார். சிங்வி-யின் கேள்விகளுக்கு பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “சட்டப்பிரிவு 167-இன் படி, அரசிடம் இருந்து தகவல்களைப் பெற ஆளுநருக்கு உரிமை உண்டு. ஆனால், ஆளுநருக்கு எழுதிய கடிதங்களில் முதலமைச்சர் மிகவும் தகாத வார்த்தைப் பிரயோகம் செய்துள்ளார்” என்று குற்றம்சாட்டி னார். அப்போது, தலையிட்ட தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “சட்டப் பிரிவு 167(பி)-யின்படி, ஆளுநர் மாநில அரசிடம் தகவல்களை அளிக்குமாறு கேட்டால் - மாநில அரசு அவருக்கு அதை வழங்கக் கடமைப்பட்டிருக் கிறது. அரசின் செயலர்களில் ஒருவர் மூலம் பதிலளிக்கச் சொல்லலாம். அதே நேரத்தில், பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என்று அமைச்சரவை கூறுகிறது என்றால், சட்டப்பேரவை யைக் கூட்டுவதற்கு ஆளுநர் கடமைப்பட்டவர். நிச்சயமாக ஆளுநர் அரசியலுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும்” என்று தெரி வித்தார். “பஞ்சாப் அரசு மற்றும் ஆளு நர் ஆகிய இரு தரப்பிலும் புறக்கணிப்பு உள்ளது” என நீதிபதி பி.எஸ். நரசிம்மா குறிப்பிட்டார். இறுதியாக, அரசியலமைப்புச் சட்டத்தின் 167-ஆவது பிரிவின்படி ஆளு நருக்குத் தகவல்களை வழங்குவது முதலமைச்சரின் கடமை; அரசி யலமைப்பின் 174-ஆவது பிரிவின்படி மாநில அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையின்படி, சட்டப் பேரவையைக் கூட்டவேண்டியது ஆளுநரின் கடமை” என்று தெரிவித்த நீதிபதிகள், “ஒரு ஜனநாயகத்தில் அர சியல் வேறுபாடுகள் ஏற்றுக்கொள்ளத் தக்கவை. ஆனால் உரையாடல்கள் அடிமட்டத்திற்கு செல்ல அனு மதிக்காமல் நிதானத்துடனும் முதிர்ச்சி யுடனும் செயல்பட வேண்டும்; இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழாது என நம்புகிறோம்” என்று குறிப்பிட்டனர்.