states

img

குஜராத் சம்பவம் 300 மீ., காவல்துறை அதிகாரியை காரில் இழுத்துச் சென்ற மாணவன்

பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் சூரத் நகருக்கு  உட்பட்ட அல்காபுரி பாலத்தின் கீழ் போலீசார் வாக னத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது  பதிவு எண் இல்லாமல் வந்த காரை காவல்  துறை அதிகாரி லோக் ரஷாக் கவுதம் ஜோஷி நிறுத்தச் சொன்னார். ஆனால் அந்த கார் நிற்காமல், காவல் அதிகாரி ஜோஷியை 300 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது. இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த காவல் அதிகாரி ஜோஷி, மருத்துவமனையில் அனும திக்கப்பட்டுள்ளார். காவல் அதிகாரியை இழுத்துச் சென்ற  கார் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ஹேம்ராஜ்  பதியா (19) என்ற பிளஸ் 2 படிக்கும் மாணவர் என்பது தெரிய வர அவரை போலீசார் கைது செய்தனர்.