ஜோஷிமத், ஜன. 10 - உத்தரகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு ஆபத்தில் சிக்கியுள்ள ஜோஷிமத் நகரத்தை, பேரிடர் பகுதி யாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அதேபோல, உத்தரகண்ட் அரசும், ஜோஷிமத்தை, மக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பற்ற நிலச்சரிவு புதைவு மண்டலமாக அறிவித்துள்ளது. வேறு இடங்களுக்கு குடிபெயர விரும்பு வோருக்கு 6 மாதங்களுக்கு ரூ. 4000 வழங்கப்படும் எனவும் மாநில அரசு அறிவித்துள்ளது. உத்தரகண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரில் நிலச்சரிவு காரணமாக சுமார் 570-க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. காலநிலை, உள்கட்டமைப்பு மாற்றங்களால் நிலம் சரிந்து, வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 60 குடும்பத்தி னர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர். மிகத் தாமதமாகவும், மக்களின் போராட்டத்திற்குப் பிறகும்தான் இப்பிரச்சனையில், ஒன்றிய - மாநில அரசுகள் கவனம் செலுத்தத் துவங்கி னர். முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஜோஷி மத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, மீட்பு நடவடிக்கை களுக்கு உத்தரவிட்டார்.
200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் விடுதி, ஓட்டல், பள்ளி, கல்லூரிகளில் அமைக்கப் பட்டிருக்கும் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டன. முக்கியச் சாலைகள், கட்டடங் களில் நாளுக்கு நாள் விரிசல்கள் அதிக மானதால், விஷ்ணுகாட் நீர்மின் நிலைய திட்டப் பணிகள், சார் தாம் நெடுஞ் சாலைப் பணிகள் நிறுத்தப்பட்டன. எனினும், நிலம் தொடர்ந்து தளர்ந்து சரிந்து வருவதாலும், நூற்றுக்கணக் கான வீடுகளில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாகவும் மக்கள் மத்தியில் தொடர்ந்து பீதி நிலவுகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) ஒரு குழுவும், மாநில பேரிடர் மீட்புப் படையின் (SDRF) நான்கு குழுக்களும் தற்போது ஜோஷிமத்தில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்,
இதனிடையே, ஜோஷிமத் விவ காரம் குறித்து, பிரதமர் அலுவலகம் முக்கிய ஆலோசனை மேற்கொண்டது. பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்ரா, இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களின் பாது காப்பிற்கு உடனடி முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், குடி யிருப்பாளர்களுடன் தெளிவான மற்றும் தொடர்ச்சியான தொடர்பை அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். எல்லை மேலாண்மை செயலாளர் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA), இந்திய புவி யியல் ஆய்வு மையம், ஐஐடி ரூர்க்கி, வாடியா இன்ஸ்டிடியூட் ஆப் ஹிமால யன் ஜியாலஜி, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹைட்ராலஜி மற்றும் மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் நிபுணர்கள் குழு நிலைமையை ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்குவார்கள் எனவும் தெரிவித்தார். ஒரு தெளிவான காலவரையறை புனரமைப்பு திட்டம் தயாரிக்கப்பட்டு, தொடர்ச்சியான நில அதிர்வு கண்கா ணிப்பு செய்யப்பட வேண்டும், புனித நகரத்திற்கான ஆபத்து உணர்திறன் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் உரு வாக்கப்பட வேண்டும் என்றும் கூறி னார். இதனிடையே, உத்தரகண்ட் மாநி லத்தில் நிலச்சரிவு ஆபத்தில் சிக்கி யுள்ள ஜோஷிமத் நகரம் பேரிடர் பாதிப்பு பகுதியாகவும் ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது.