புதுதில்லி, டிச.28- உணவுப் பாதுகாப்புச் சட்டத்துடன் பிரதமர் கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டத்தை இணைத்திட வேண்டுமென மோடி அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசி யல் தலைமைக் குழு கூட்டம் டிசம்பர் 27, 28 ஆம் தேதிகளில் புதுதில்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திட்டத்தை இணைத்திடுக!
2013ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருள்களை அளிப்பது, நாட்டிலுள்ள மக்க ளுக்கு 2023ஆம் ஆண்டில் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்குத் தொடராவிட்டால் மக்க ளைப் பட்டினிச் சாவுகளிலிருந்து காப்பாற்ற முடியாது என்பது ஒப்புக்கொள்ளப்பட்டுள் ளது. மோடி அரசாங்கம் இதனை மறுத்த போதி லும், உலகப் பசி-பட்டினி அட்டவணை சித்த ரித்துள்ள இத்தகைய உண்மை நிலைமையா னது ‘‘மிகவும் கடுமையான’’ ஒன்றாகும். நாட்டிலுள்ள மக்களில் 81.35 கோடி மக்க ளுக்கு இலவச உணவு தானியங்கள் தலா 5 கிலோ அளிக்கப்பட வேண்டும் என்ற போதிலும், உண வுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அவர்களுக்கு மானிய விலையில் அளிக்கப்பட வேண்டிய அரிசியையும், கோதுமையையும் கொடுக்க மறுத்து வருகிறது. இதன் விளைவாக, மக்கள் தங்களுக்கு மானிய விலையில் 5 கிலோ தானி யங்கள் கிடைக்காததன் காரணமாக, வெளிச் சந்தையில் வாங்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதன் காரணமாக கோதுமையை கிலோ 30 ரூபாய்க்கும், அரிசி யை கிலோ 40 ரூபாய்க்கும் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இது கோடானுகோடி மக்களின் மீது ஏவப்பட்டுள்ள குரூரமான தாக்குதலாகும். பிரதமர் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின்கீழ் தலா 5 கிலோ உணவு தானி யங்கள் இலவசமாகவும், உணவுப் பாது காப்புச் சட்டத்தின் கீழ் மானிய விலையில் அளிக்கப்பட்டு வந்த தலா 5 கிலோ உணவு தானி யங்கள் அளிக்கப்படுவதும் தொடர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு கோருகிறது.
கூர்மையாகும் மதவெறி நடவடிக்கைகள்
ஆளும் கட்சி எம்.பி.க்களால் முஸ்லீம் சிறு பான்மையினருக்கு எதிராக வன்முறை வெறி யாட்டங்கள் ஏவப்படும் விதத்தில் பேசப் பட்டு வருவது மிகவும் கண்டிக்கத்தக்கதா கும். ஆட்சியாளர்கள் இவற்றின் மீது தாமா கவே நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்வதற்குப் பதிலாக, இவர்களின் பேச்சுக்க ளுக்கு எதிராக எவரேனும் ‘புகார்’ அளித்தால் மட்டும்தான் நடவடிக்கை எடுப்போம் என்று கூறுகிறார்கள். இவ்வாறாக வன்முறை, வெறுப்பு போன்று விஷத்தைக் கக்கும் விஷமி களுக்கு ஒன்றிய ஆட்சியாளர்கள் வெளிப்படை யாகவே ஆதரவும் பாதுகாப்பும் அளித்து வரு கிறார்கள். கல்வி நிறுவனங்களில், முஸ்லீம் மாண வர்களுக்கு எதிராக ஆபத்தான முறையில் தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டிருக் கின்றன. கிறித்தவ சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களும் அதிகரித்துக் கொண்டிருக் கின்றன. மௌலான ஆசாத் தேசிய ஃபெல்லோஷிப் (MANF) என்ற பெயரில் முஸ்லீம் மாணவர் களுக்கு அளிக்கப்பட்டு வந்த கல்வி உத வித்தொகை நிறுத்தப்பட்டுவிட்டது. இது தொடர்பாக அரசாங்கம் நாடாளுமன்றத்தில், பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களு டன் இது இணைக்கப்பட்டுவிட்டதாகக் கூறி யிருக்கிறது. இது அப்பட்டமாகத் தவறானது. பல மாநிலங்களில் முஸ்லீம்களும், கிறிஸ்த வர்களும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின ராகக் கருதப்படவில்லை. இந்த கல்வி உத வித்தொகை திட்டம் (scholarship scheme) மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும்.
நீதித்துறை
மோடி அரசாங்கம், நீதித்துறையின் மீதான தாக்குதலை, நீதித்துறை நியமனங்களிலும், மாற்றல்களிலும் அரசாங்கம் ஆதிக்கம் செலுத் தக்கூடிய விதத்தில் நீதித்துறையை மாற்றும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தி இருக்கிறது. அரசாங்கம் அறிவித்த தேசிய நீதித்துறை நியமனங்கள் ஆணையம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்ததைத் தொடர்ந்து இது அதிகமாகியிருக்கிறது. நீதித்துறை நியமனங்களில் அர சாங்கத்தின் கட்டுப்பாட்டைக் கொண்டுவர மோடி அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. நீதித்துறையின் சுதந்திரம் சமரசமற்றமுறையில் உயர்த்திப் பிடிக்கப்பட வேண்டும்.
விசாரணைக் கைதிகளை விடுவித்திடுக!
2018 ஜனவரி 1 அன்று பீமா கொரேகா னில் நடைபெற்ற சாதி வன்முறையை விசாரித்த மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர், புனே நகரத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலை வில் உள்ள எல்கர் பரிஷத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கும் வன்முறைக்கும் எந்தச் சம்பந்த மும் இல்லை என்று ஒப்புக்கொண்டிருக்கிறார். இதன் அடிப்படையில் இதுதொடர்பாக சட்ட விரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டி ருக்கும் அனைவரும் உடனடியாக நிபந்தனை எதுவுமின்றி விடுவிக்கப்பட வேண்டும்.
கூட்டுறவு சட்டமுன்வடிவு
2022 பல மாநில கூட்டுறவு சங்கங்களின் திருத்தச் சட்டமுன்வடிவினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. இது கூட்டாட்சி மற்றும் மாநில உரிமைகளின் மீதான தாக்குதலாகும். கூட்டுறவு என்பது மாநிலப் பட்டியலில் உள்ளதாகும். இப்போது முன்மொழியப்பட்டிருக்கும் சட்டமுன்வடிவு, மாநிலங்களில் உள்ள சட்டங்களின்படி செயல் பட்டுக்கொண்டிருக்கும் மாநிலக் கூட்டுறவு சங்கங்களின் மீது ஒன்றிய அரசாங்கம், அப்பட்ட மான முறையில் தாக்குதலைத் தொடுக்க வகை செய்கிறது. இது, ஒன்றிய அரசாங்கம், கூட்டு றவு சங்கங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான நடவடிக்கையே தவிர வேறல்ல. இது மாநிலங்களில் தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ள அரசாங்கங்களின் உரிமை களையும் அரித்து வீழ்த்திடும், கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான தாக்குதலாகும்.
திரிபுராவில் பாஜகவின் அட்டூழியம்
திரிபுரா மாநிலத்திற்கான சட்ட மன்றத்தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்ப தால், ஆளும் பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இதர எதிர்க்கட்சிகள் மீது தாக்கு தல்களைத் தீவிரப்படுத்தி இருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடது சாரிக் கட்சிகளும், காங்கிரஸ் கட்சியும் ஜன நாயகத்தை மீண்டும் ஏற்படுத்திட வேண்டும் என்றும், ஆளும் பாஜகவின் கொடுங்கோன்மை ஆட்சிக்குப் பதிலாக, சட்டத்தின் ஆட்சி மீண் டும் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் கூட்டாகக் கோரி வருகின்றன. தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். தேர்தல்கள் நேர்மையாகவும் நியாயமாகவும் நடைபெற வேண்டுமானால் அங்கே ஜனநாய கம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீண்டும் முழுமையாக ஏற்படுத்தப்பட வேண்டும்.
மத்தியக் குழுக் கூட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தி யக் குழுக் கூட்டம் 2023 ஜனவரி 28-30 தேதி களில் கொல்கத்தாவில் நடைபெறும்.
தமிழில்: ச.வீரமணி