states

img

விவசாயத் தொழிலாளர் ஒப்பாரி போராட்டம்!

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில்  நடைபெற்ற இந்தப் போராட்டத்தில்  பல்லாயிரம் பேர் கலந்து கொண்டு  ஒப்பாரியிட்டனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக  வேலையுறுதித் திட்டத்தில் நாடு  முழுவதும் 14 கோடி பேர் பயனாளி களாக உள்ளனர். தமிழ்நாட்டில் 93 லட்சம் பேர் வேலை அட்டைப்  பெற்று திட்டத்தின் பயனாளிகளாக உள்ளனர். சர்வதேச பொருளாதார அறி ஞர்கள் பலரும் போற்றும் இத் திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு 2014 முதல் படிப்படியாக சிதைத்து வருகிறது. திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் வெட்டிச் சுருக்கி வருகிறது.  ஒன்றிய அரசின் மோசமான பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்டுள்ள வேலையின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் வாழ்க்கையின் துயரங்களில் தள்ளப்பட்டுள்ள கிராமப்புற ஏழைகளுக்கு அற்ப- சொற்பமாக கிடைத்து வந்த ஊரக  வேலை திட்டத்தையும் - சிறு வரு மானத்தையும் ஒன்றிய பாஜக அரசு  தட்டிப் பறித்துள்ளது. நடப்பு 2023-24 ஆம் ஆண்டு திட்டத்திற்கு ரூ. 2.64 லட்சம் கோடி  நிதி ஒதுக்க வேண்டிய நிலையில்,  வெறும் ரூ.60 ஆயிரம் கோடி மட்  டுமே ஒதுக்கீடு செய்தது.

இதனால்  கிராமப்புற வேலை உறுதித் திட்டத் தில் மிகக் குறைவாகவே வேலை வழங்கப்பட்டுள்ளது. ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியை உரிய காலத்தில் விடுவிக்காததால், தொழிலாளர்களுக்கு சம்பளமும், இரண்டு வாரம் முதல் பன்னிரண்டு  வாரமாக காலம் கடத்தப்பட்டு வரு கிறது. எனவே, தீபாவளி பண்டி கைக்கு இன்னும் சில தினங்களே  உள்ள நிலையில், இப்போதாவது, ஒன்றிய பாஜக அரசு உடனடியாக ஊதியத்தை விடுவிக்க கோரி அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் சார்பில் திங்க ளன்று (நவம்பர் 6) தமிழ்நாடு முழு வதும் 200-க்கும் மேற்பட்ட மையங்க ளில்  ஒப்பாரிப் போராட்டம் நடை பெற்றது. இதில் 15 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒப்பாரியிட்டு கண்டனத்தைத் தெரிவித்தனர். மாநிலப் பொதுச் செயலாளர் வீ. அமிர்தலிங்கம் நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிற்றிலும், மாநிலப் பொருளாளர் அ. பழ னிச்சாமி திருச்சியிலும் போராட்டங்  களில் பங்கேற்றனர்.