சென்னை,செப்.5- நீண்டகாலமாக சிறை யில் உள்ள கைதிகளை நன்னடத்தையின் அடிப்ப டையில் முன்கூட்டியே விடு தலை செய்யக்கோரிய வழக்குகள் மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கள் எம்.சுந்தர் சக்திவேல் அமர்வு முன்பு செவ்வா யன்று விசாரணை நடை பெற்றது. அப்போது அரசு தலை மை குற்றவியல் வழக்கறி ஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் 49 சிறை வாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான பரிந்துரையை ஆளுநர் ஒப்பு தலுக்காக அனுப்பப் பட்டுள்ளது. அந்த பரிந்துரை நிலுவையில் உள்ளது என்றார். மேலும், அது தொடர் பாக உள்துறை செயலாளர் கடிதத்தை சமர்ப்பித்தார். அப்போது மனுதாரர் தர ப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனோகர், தமிழக அரசின் பரிந்துரைக்களுக்கு ஆளு நர் ஒப்புதல் அளிப்பது இல்லை. ஆளுநர் மேலும் தாமதம் செய்வார் என குற்றம் சாட்டினார். இருதரப்பு வாதங் களை கேட்ட நீதிபதி, ஆளு நரின் முடிவு தெரிந்த பிறகு இந்த வழக்கில் முடிவு தெரி விக்கப்படும் என்று கூறினார். வழக்கு விசாரணை செப்டம்பர் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.