states

img

திருச்சூரில் லட்சம் பேர் அணிவகுப்புடன் விவசாயிகள் சங்க மாநாடு நிறைவு

கோடியேரி பாலகிருஷ்ணன் நகர்  (திருச்சூர்), டிச.16- மனிதகுலம் உயிர்வாழ பயிரிடுவோரின் கூட்டு வலிமையையும், போராட்ட குணத்தையும் உணர்த்தும் வகையில் வெள்ளியன்று (டிச.16) திருச்சூரில் விவசாயிகளின் எழுச்சிமிகு அணிவகுப்பு நடந்தது. ஒருங்கிணைந்த பேரணியாக அல்லாமல் அனைத்து சாலைகளிலிருந்தும் அணி அணியாக பொதுக்கூட்டம்  நடந்த தேக்கின்காடு மைதானத்தில் செம்பதாகை ஏந்திய மக்கள் திரண்டனர்.   டிசம்பர் 13இல் திருச்சூரில் தொடங்கிய அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 35 ஆவது அகில இந்திய மாநாடு வெள்ளியன்று (டிச.16) நிறைவு பெற்றது. மாநாட்டு நிறைவு நிகழ்ச்சியையொட்டி நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது.  கோடியேரி பாலகிருஷ்ணன் நகரில் மாநாட்டு பொதுக்கூட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைத்து பேசினார்.  விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே, பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா, துணைத் தலைவர்  எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, இணைசெயலாளர் இ.பி.ஜெயராஜன் உள்ளிட்டோர் பேசினர். அதைத் தொடர்ந்து ஹைதராபாத் பிரஜா நாட்டிய மஞ்சின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய 35 ஆவது மாநாட்டின் நிறைவு நாளான வெள்ளியன்று மாநாட்டு அரங்கில் பிரதிநிதிகள் மத்தியில் ஹைதராபாத் பிரஜா நாட்டிய மஞ்சின் கலைக் குழுவினரின் வீரத்தெலுங்கானா நிஜநாடகம் நடந்தது.