டோடா ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2 மாத காலமாக பயங்கரவாத தாக்குதல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகள் என இருதரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. டோடா மாவட்டத்தின் தாரி கோடே எனுமிடத்தில் திங்களன்று மாலை ராணுவ வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சண்டையில் மூத்த ராணுவ அதி காரி உட்பட 5 பேர் படுகாயமடைந்த னர். அவர்கள் ராணுவ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலை யில், செவ்வாயன்று அதிகாலை ராணுவ அதிகாரி உட்பட 4 வீரர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழந்த அனைவரும் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் ராணுவ படைப்பிரிவினர் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 10 நாட்கள் இடைவெளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு பலி யான ராணுவ வீரர்களின் எண்ணிக் கை 9 ஆக உயர்ந்துள்ளது. இத னால் ஜம்மு-காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஜம்மு- காஷ்மீரில் மீண்டும் தேர்தலை ஒத்திவைக்க பாஜக திட்டம்?
ஜம்மு-காஷ்மீருக்கு நீண்ட காலமாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019இல் மோடி அரசு பறித்து, ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசமாக்கியது. சிறப்பு அந்தஸ்து ரத்தால் கடந்த 5 ஆண்டுகாலமாக அங்கு ஆளுநர் ஆட்சி நடைபெற்று வரு கிறது. இந்நிலையில், உச்சநீதி மன்ற உத்தரவால் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடை பெறும் என தகவல் வெளியானது. எனினும் இந்த தேதியில் தான் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என உறுதியாக எவ்வித அறி விப்பும் இதுவரை வெளியாக வில்லை. ஆனால் ஜம்மு-காஷ்மீ ரில் தேர்தலுக்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என சமீபத்தில் தேர்தல் ஆணையம் மூலம் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு வெளியான நாள் முதல் ஜம்மு-காஷ்மீரில் பயங்கர வாத தாக்குதல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. மக்களவை தேர்தல் மற்றும் 7 மாநில சட்ட மன்ற இடைத்தேர்தலில் தோல்வி யடைந்தது போல ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலிலும் தோல்வியே கிடைக்குமோ? என்ற அச்சத்தில் பாஜக உள்ளது. இந்நிலையில், பயங்கரவாத தாக்குதலை காரணம் காட்டி வழக் கம் போல ஜம்மு- காஷ்மீரில் தேர் தலை ஒத்திவைக்கும் திட்டத்தில் பாஜக உள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.