states

img

பீகாரில் 52 சதவிகிதம் பேர் ஏழைகள்; இதுதான் இரட்டை என்ஜின் ஆட்சியா?

பாட்னா, ஜன.4- பீகாரின் ஒட்டுமொத்த மக் கள் தொகையில் 51.91 சதவிகித மக்கள் ‘பலபரிமாண ஏழைகள்’ என நிதி ஆயோக் அண் மையில் அறிக்கை வெளியிட்டி ருந்தது.  நீண்டகாலமாக பாஜக, ஐக்கிய ஜனதாதளம் ஆட்சியில் இருக்கும் பீகார் மாநிலம், “கல்வி, சுகாதாரம், வாழ்க்கைத் தரம், வேலைவாய்ப்பின்மை போன்றவற்றில் மிகவும் பின்தங் கிய நிலையில் உள்ளது” என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டு இருந்தது. இந்நிலையில், நிதி ஆயோக் கின் இந்த அறிக்கையைக் சுட்டிக் காட்டி, பீகாரின் மோசமான நிலைக்கு, ‘இரட்டை என்ஜின் அரசு’ (மாநிலத்திலும் ஒன்றியத்தி லும் ஒரே கட்சி ஆட்சி) என பெருமை பேசுவோர் பொறுப் பேற்பார்களா?

என ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி கேள்வி எழுப்பியுள்ளார். ‘‘நிதி ஆயோக் அறிக்கை யின்படி பீகார் மாநில மக்களின் மோசமான நிலைக்கு டபுள்-என் ஜின் அரசு பொறுப்பேற்க வேண் டும். இரட்டை என்ஜின் அரசின் முதலமைச்சர் பொறுப்பேற்க வில்லை என்றால், வேறு யாரை பொறுப்பேற்கச் செய்வது? பீகார் மக்கள் ஏற்கனவே உணவு, வறட்சி, பணவீக்கத்தால் விலை வாசி உயர்வு ஆகியவற்றை எதிர்கொண்டு வருகிறார்கள். நிதிஷ் குமார் அரசு வாக்குறுதி அளித்ததுபோல், உடனடியாக 19 லட்சம் பேருக்கு வேலை வழங்க வேண்டும். ஒவ்வொரு ஆண் டும் இதை வழங்கும்படி நான் கூறவில்லை. ஆனால், ஒரு வரு டத்திலாவது இதைச் செய்ய வேண்டும். அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை குறைந்த பட்சமாவது நினைவில் கொள்ள வேண்டும்’’ என்று தேஜஸ்வி சாடியுள்ளார்.