சென்னை, ஜூன் 29 - தமிழ்நாடு மாநில அமைச்சரவை யிலிருந்து வி. செந்தில் பாலாஜியை நீக்குவதாக ஆளுநர் ஆர்.என். ரவி அறிவித்துள்ளார். ஊழல் தொடர்பான கிரிமினல் வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலை யில், செந்தில் பாலாஜி அமைச்சரவை யில் நீடித்தால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என்பதால், அவரை நீக்கி உத்தரவிடுவதாக ஆர்.என். ரவி கூறியுள்ளார். செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட பின்னணியில், அவரிடமிருந்த துறைகளை, மூத்த அமைச்சர்களுக்கு மாற்றியும், செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நியமித்தும், ஆளுநர் ஆர்.என். ரவிக்கு, தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்திருந்தது. ஆனால், இந்தப் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்க மறுத்து விட்ட நிலையில், முதல்வருக்கே இருக்கக்கூடிய அமைச்சர்களைப் பரிந்துரைக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, “செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார்” என்று தமிழ்நாடு அரசு, கடந்த ஜூன் 16 அன்று அரசாணை வெளியிட்டது. ஆனால், ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர்களை தன்னால் நீக்க முடியாது என்பதை நன்கு அறிந் தும், தன்னிச்சையாக செந்தில் பாலாஜியை அமைச்சரவையி லிருந்து நீக்கி வியாழனன்று இரவு உத்தரவு பிறப்பித்துள்ளார். அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை, சட்டரீதியாக சந்திப்போம் என முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.