புதுதில்லி, ஜுன் 5- சிக்னல் உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகளுக்கான ஒதுக்கீட்டை ரயில்வே குறைத்து, சாதாரண பயணி களிடம் இருந்து ஆயிரக்கணக்கான கோடிகளை பறித்துள்ளது. 2022-23 நிதியாண்டில் பயணிகள் மூலம் வருவாய் 61 சதவீதம் அதிகரித்துள்ளது. 2020இல் கட்டண உயர்வு, 2016 முதல் அமல்படுத்தப்பட்ட ஃப்ளெக்ஸி டிக்கெட் கட்டணம், தட்கல் பிரீமியம், மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகை வாபஸ், ரத்து கட்டண உயர்வு ஆகியவை பயணிகளை கசக்கிப் பிழிய வழிவகுத்தது. கடந்த ஆண்டை விட இவை 25 சதவீதம் அதிகம். சரக்கு வரு வாய் 1.62 லட்சம் கோடியாகவும், பயணி கள் வருவாய் 63,300 கோடியாகவும் உள்ளது. சரக்கு வருவாய் 15 சதவிகி தம் மட்டுமே அதிகரித்துள்ளது. 2021-22இல் பயணியர் வருவாய் ரூ.39,214 கோடியிலிருந்து ரூ.63,300 கோடியை எட்டியது. மொத்த படுக்கை வசதியில் 10 சத விகிதம் டிக்கெட் விற்பனை முடிந்தால், கட்டணம் 10 சதவிகிதம் அதிகரிக்கும் என்பது மோடி அரசால் நடைமுறைப் படுத்தப்பட்ட ஃப்ளெக்ஸி முறை. ஃப்ளெக்ஸியில் தினசரி சராசரி வரு மானம் ரூ.3 கோடி. மூத்த குடிமக்களுக் கான பயணச் சலுகை ரத்து செய்யப் பட்டதன் மூலம் 2022-23இல் மட்டும் ரூ.2,242 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 2019-2022 ஆம் ஆண்டில் ரத்து கட்ட ணம் மற்றும் காத்திருப்பு பட்டியல் டிக்கெட்டுகளை ரத்து செய்யாததன் மூலம் ரூ.10,404 கோடி கிடைத்துள் ளது. இந்த இனத்தின் தினசரி சராசரி வருமானம் ரூ.7.12 கோடி. கடந்த ஆண்டு ஆன்லைன் முன்பதிவுக்கான கூடுதல் கட்டணமாக ரூ.600 கோடி வசூ லிக்கப்பட்டது. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஜூன் 2014இல் கட்டணம் 14.1 சதவிகிதம் உயர்த்தப்பட்டது. ஜனவரி 2020- இல், பல்வேறு வகுப்புகளுக்கு ஒரு கிலோமீட்டருக்கு ஒரு பைசாவி லிருந்து நான்கு பைசாவாக உயர்த்தப்பட்டது.
ரயில் பாதுகாப்பு நிதி பாதிக்கு மேல் குறைப்பு
ரயில்வே பாதுகாப்பு அமைப்பு களை மேம்படுத்த தேசிய ரயில் பாது காப்பு நிதி ஒதுக்கீடு கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது மற்றும் பயணி களை கசக்கிப் பிழிவதன் மூலம் ரயில்வே 61 சதவிகித வருவாய் ஈட்டியது. 2017 முதல் ஐந்து ஆண்டு களுக்கு, ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் 2022 முதல் ஐந்தாண்டுகளுக்கான ஒதுக்கீடு ரூ.45,000 கோடி மட்டுமே. குறைப்பு ஐம்பது சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ளது. 2017ஆம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில், ஆண்டுக்கு ரூ.15,000 கோடியும், ரயில்வேயின் உள் வளங்களில் இருந்து ரூ.5,000 கோடியும் அரசு ஒதுக்கும் என்று கூறப்பட்டது. அந்தத் தொகை எந்த நிலையிலும் கருவூலத்தைச் சென்றடையவில்லை. 2022இல் திருத்தப்பட்டபோது, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான ஒதுக்கீடு ரூ.45,000 கோடியாக குறைக்கப்பட்டது. நடப்பாண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது ரூ.11,000 கோடி மட்டுமே.