states

img

‘மணிப்பூரில் அமைதிக்கு மட்டுமே முன்னுரிமை’

புதுதில்லி, ஜூன் 29 - மணிப்பூர் பாஜக அரசு மற்றும் காவல்துறையின் கடும் கெடுபிடிகள், தடை உத்தரவுகளைத் தாண்டி, சூரசந்த்பூர் நிவாரண முகாமிலுள்ள மக்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்தார். அவர்களோடு கலந்துரையாடியதுடன், அங்குள்ள குழந்தைகளுடன் சேர்ந்து மதிய உணவையும் பகிர்ந்து கொண்டார். சூரசந்த்பூருக்கு பயணம் மேற்கொண்ட ராகுலை, 20 கி.மீ. முன்ன தாக பிஷ்ணுபூரிலேயே மணிப்பூர் காவல்துறை தடுத்து நிறுத்தியது. சூரசந்த்பூருக்கு செல்ல அனுமதி மறுத்து விட்டது. அப்போது அங்கு திரண்ட பிஷ்ணுபூர் மக்கள், ராகுல் காந்தியை அனுமதிக்கக் கோரி காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  தங்களின் பிரச்சனையை எடுத்து ரைப்பதற்காக ராகுல் காந்தியின் காரை நெருங்கிச் சென்ற பெண்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆவேசமடைந்த அவர்கள், இம்பால் - பிஷ்ணுபூர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் அந்த  சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்தப் பின்னணியிலேயே, தங்களின் நிலையிலிருந்து பின்வாங்கிய மணிப்பூர் பாஜக அரசின் காவல்துறை, ராகுல் காந்தி ஹெலிகாப்டர் மூலமாக சூரசந்த்பூர் செல்வதற்கு அனுமதி வழங்கியது.

ராகுல் காந்தியின்  2 நாள் பயணத் திட்டம்

மணிப்பூர் மாநிலத்தில், காங்கிரஸ் தலை வர் ராகுல் காந்தி 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக இருந்தார். அந்த மாநிலத்தில், வன்முறையால் இடம்பெயர்ந்த மக்களையும், மக்கள் சமூகக் குழுக்களின் தலைவர்களையும் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் தெரி விப்பதற்கு திட்டமிட்டிருந்தார். மேலும் இந்தப் பயணத்தின்போது, மெய்டெய், குக்கி உள்ளிட்ட அனைத்து பிரிவு பிரதிநிதிகளைச் சந்தித்து, அவர் களின் பிரச்சனைகள், கோரிக்கைகளை கேட்டறிவதுடன், அனைத்துத் தரப்பின ரும் வன்முறையைக் கைவிட வேண்டும்; மாநிலத்தில் மீண்டும் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்து வதாக இருந்தார். இதற்காக, வியாழனன்று இம்பால் விமான நிலையத்தில் இறங்கிய அவரை மணிப்பூர் முன்னாள் முதல்வர் ஒக்ரம் இபோபி சிங் மற்றும் மணிப்பூர் பிரதேச காங்கிரஸ் தலைவர் கெய்ஷாம் மேகச் சந்திர சிங் ஆகியோர் வரவேற்றனர். 

தடுத்து நிறுத்திய காவல்துறையினர்

பின்னர், அங்கிருந்தபடியே ராகுல் காந்தி, வன்முறையால் பாதிக்கப்பட்டு சூரசந்த்பூர் முகாமில் தங்கியிருக்கும் மக்களைச் சந்திப்பதற்காக புறப்பட்டார். ஆனால், 20 கிலோ மீட்டருக்கு முன்ன தாக பிஷ்ணுபூர் அருகே அவரது காரைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினர், தொடர்ந்து பயணிக்க அனுமதி மறுத்து விட்டனர். ராகுல் காந்தி வாகனம் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்த வாய்ப்புகள் இருப்பதால், அவரது தனிப் பட்ட பாதுகாப்பை கவனத்தில் கொண்டு சாலை மார்க்கமாக செல்ல அனுமதி வழங்கவில்லை என பிஷ்ணுபூர் காவல் கண்காணிப்பாளர் ஹெய்ஸ்னம் பல்ராம் சிங் தெரிவித்தார். ஆனால், காவல்துறை யின் இந்த தடைக்கு எதிர்ப்பு தெரி வித்து, பிஷ்ணுபூர் மக்கள் நூற்றுக் கணக்கில் போராட்டத்தில் இறங்கினர். காவல்துறையுடன் தள்ளுமுள்ளு-விலும் ஈடுபட்டனர். பாஜக தலைமை தனது தோல்வியை மறைப்பதற்காகவே, இவ்வாறு நடந்து கொள்கிறது என்று குற்றம் சாட்டினர்.

தலைவர்கள் கண்டனம்

மணிப்பூர் பாஜக அரசானது, ராகு லின் பயணத்தை திட்டமிட்டு தடுத்து நிறுத்தியிருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியும் தனது கண்டனத்தைத் தெரி வித்தது.  “மணிப்பூர் விவகாரத்தில், பிரதமர் மோடி அமைதியாக இருப்பதாலேயே, ராகுல் காந்தி மக்களைச் சந்திக்க செல்வ தை தடுத்து நிறுத்துவதா?” என்று காங்கிரஸ் கட்சியின் சமூக மற்றும் டிஜிட்டல் ஊடகப் பிரிவு தலைவர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் கேள்வி எழுப்பினார். “மணிப்பூர் சென்ற ராகுல் காந்தியை அப்பகுதி மக்கள் இருபுற மும் நின்று கைகளை அசைத்து வர வேற்றனர். மக்களே வரவேற்கும் போது  ராகுல் காந்தியை ஏன் தடுத்தனர் என்பதை புரிந்து கொள்ள முடிய வில்லை” என காங்கிரஸ் பொதுச்செய லாளர் கே.சி. வேணுகோபால் சந்தேகம் எழுப்பினார். மணிப்பூர் பாஜக அரசாங்கமானது, “ராகுல் காந்தியின் இரக்கமான வெளிப்பாட்டைத் தடுக்க எதேச்சதிகார முறைகளைப் பயன்படுத்துகிறது” என்று அகில இந்திய காங்கிரஸ் தலை வர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டினார். “இது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது மற்றும் அனைத்து அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக விதிமுறைகளையும், இந்த நடவடிக்கை சிதைக்கிறது.

மணிப்பூருக்கு அமைதி தேவை, மோதல் அல்ல” என்றும் கார்கே டுவிட்டரில் குறிப்பிட்டார். இதேபோல ராஷ்ட்ரிய ஜனதாதளம், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கண்டனக்குரல் எழுப்பின. “ராகுல் காந்தியின் வருகை உண்மையில் நிர்வாகத்தால் எளிதாக்கப்பட்டிருக்க வேண்டும். பிரதமர் மோடியும் மணிப்பூ ருக்கு செல்ல வேண்டும். இதுதான் உண்மையான இந்தியாவாக இருக்க  முடியும்” என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்.பி. மனோஜ் ஜா தெரிவித் தார். “நான் மணிப்பூரின் அனைத்து சகோதர சகோதரிகளின் பேச்சைக் கேட்க வந்தேன். அனைத்து சமூகத்தி னரும் மிகவும் அன்பாகவும் வரவேற்  கும் மனநிலையுடனும் இருக்கிறார்கள்.  ஆனால், அரசாங்கம் என்னைத் தடுப் பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மணிப்பூர் பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும். அமைதிக்கு மட்டுமே முன்  னுரிமை அளிக்க வேண்டும்” என்று  ராகுல் காந்தியும் கேட்டுக் கொண்டார்.

திரண்டு வந்து வரவேற்பு அளித்த பெண்கள்

இதனிடையே, ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு பிஷ்ணு பூர் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. ராகுல் காந்தியை அனும திக்கக் கோரி, அவர்கள் போராட்டங்  களில் இறங்கினர். காவல்துறையுடனும் அவர்கள் வாக்குவாதம் மற்றும் மோத லில் ஈடுபட்டனர். “ராகுல் காந்தியை ஏன் தடுக்கி றீர்கள்? அவரை மணிப்பூருக்குள்  விடுங்கள்” என்ற முழக்கத்துடன், பிஷ்ணுபூரில் போராடிய பெண்களை, மணிப்பூர் போலீசார் கண்மூடித்தன மாக இழுத்து குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர்.  ராகுல் காந்தி சாலை வழியாக செல்வதற்கு அனுமதி மறுத்த காவல் துறை, ஒருகட்டத்தில் மக்களின் எதிர்ப்பு  வலுத்ததால், ஹெலிகாப்டர் மூலமாக சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கலாம் என இறங்கி வந்தது. இது வும் சூரசந்த்பூருக்கு மட்டுமே பொருந் தும்; மொய்ராங்கிற்கு, சாலை வழி யாகவோ அல்லது விமானம் மூலமா கவோ எந்த வழியாகவும் செல்ல அனு மதி இல்லை என்று கூறியது. இதையடுத்து, ராகுல் காந்தி சூரசந்த்பூரில் உள்ள நிவாரண முகா மிற்கு ஹெலிகாப்டரில் சென்றார். அங்கு இனக்கலவரத்தால் இடம் பெயர்ந்த மக்களை நேரில் சென்று பார்வையிட்டார். அவர்களுடன் கலந்து ரையாடினார். சூரசந்த்பூர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகா மில் இருந்த குழந்தைகளுடன் மதிய உணவையும் பகிர்ந்து கொண்டார். இரவு இம்பால் திரும்பிய ராகுல்  காந்தி, திட்டமிட்டபடி வெள்ளிக்கிழ மையன்று இரண்டாவது நாள் பய ணத்தை தொடர முடிவு செய்துள்ளார். ஆனால், அது முடியுமா என்பது தற்போ தும் கேள்விக்குறியாகவே உள்ளதாக  மணிப்பூர் காங்கிரஸ் தலைவர் கெய் ஷாம் மேகச்சந்திரா தெரிவித்துள்ளார்.