பாகிஸ்தான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பூஞ்ச் பகுதியை பார்வையிட்டார் ராகுல் காந்தி
ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தான் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியப் பகுதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்த இருநாடுகளுக்கும் போர் பதற்றம் ஏற்பட்டது. குறிப்பாக பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச், ரஜோரி, மிர்பூர், பாரமுல்லா உள்ளிட்ட மாவட்டங் கள் கடுமையாக பாதிக்கப் பட்டன. இதில் பூஞ்ச் பகுதி மறுசீர மைப்பு பணிகள் மேற்கொள்ளப் பட முடியாத அளவிற்கு மிக மோச மான அளவில் உருக்குலைந்துள் ளது. இந்நிலையில், பாகிஸ்தான் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள பூஞ்ச் மாவட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கி ரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி சனிக்கிழமை அன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதே போன்று ஏவுகணை தாக்குதலில் பாதிக்கப்பட்ட வீடுகளை, குடும் பத்தினரை, மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். குறிப்பாக ஒரே இடத்தில் ஆய்வு மற்றும் ஆறுதல் நிகழ்வை நிகழ்த்தாமல் பூஞ்ச் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடாகச் சென்று ஆறுதல் கூறி, நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு தொடர்பான நடவடிக்கை எடுக்க மாநில மற்றும் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும் என உறுதி யளித்தார். ஆய்வுக்குப் பின் ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பின் போது,”பூஞ்ச் பகுதியில் பாகிஸ் தான் அத்துமீறி நடத்திய தாக்குத லில் பலர் உயிரிழந்தது பெரும் சோகம். ஜம்மு-காஷ்மீரில் பாதிக் கப்பட்ட மக்களின் கோரிக்கையை தேசிய அளவில் எடுத்துச் செல் வேன். பூஞ்சில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்சனைகளை புரிந்துகொள்ள முயற்சித்தேன்” என அவர் கூறினார்.