states

தீக்கதிர் விரைவு செய்திகள்

கடந்த பத்தாண்டுகளில் இந்திய நீதித்துறை சுதந்திரம் வீழ்ச்சிசர்வதேச நீதிபதிகள்  ஆணையம் அறிக்கை

சர்வதேச நீதிபதிகள் ஆணையத் தின் (ICJ) அறிக்கையில் கடந்த பத்தாண்டுகளில் இந்திய நீதித் துறை சுதந்திரம் வீழ்ச்சியடைந்துள்ளது என அடிக்கோடிட்டுக் காட்டப் பட்டுள்ளது.  மேலும் அவ்வறிக்கையில் நீதித்துறை நியமனங்களில் வெளிப் படைத்தன்மை இல்லாதது, நீதி பதிகளின் தன்னிச்சையான இடமாற்றங் கள்,  ஓய்வுக்குப் பின் அரசியல் பதவிகள் கொடுப்பது என இந்தியாவில் நீதித் துறை சுதந்திரம் எதிர்கொள்ளும் பல  முக்கியமான சிக்கல்களையும் அவர்கள் சுட்டிக்கடியுள்ளனர். தகுதி, திறன், அனுபவம் மற்றும் நேர்மை  போன்ற புறநிலை அளவுகோல்க ளின் அடிப்படையில் நீதிபதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தெளிவான, வெளிப்படையான நடைமுறை எதுவும் இல்லை. இந்த பாதுகாப்பு நடைமுறை இல்லாததால் முறையற்ற வழிகள் மற்றும் நோக்கங்களின் அடிப்படையில் நீதிபதிகள் நியமனங்கள் நடக்கின்றது. கொலீஜியம் பரிந்துரைகள் வந்தா லும் இந்திய அரசாங்கத்திடம் உள்ள வீட்டோ அதிகாரத்தின் மூலம் ( தனது ஆதரவாளராக இல்லாத பட்சத்தில்)  கொலீஜியத்தின் பரிந்துரையை அவர்க ளால் நிராகரிக்க முடியும்.   நியமனங் களை தாமதப்படுத்தவும் முடியும். நீதிபதிகள் ஓய்வு பெற்ற உடனேயே அரசு அவர்களுக்கு பல்வேறு பதவி களை வழங்குகின்றது. இது பதவி ஆசை களை காட்டி தீர்ப்புகளில் நேர்மை யின்மையை நீதிபதிகள் பின்பற்றும் அபாயம் உருவாகியுள்ளது எனவும் சர்வதேச நீதிமன்றம் கவலையை தெரி வித்துள்ளது. குறிப்பாக நீதித்துறையில் பன்முகத் தன்மை இல்லாத்தையும் அவர்கள் சுட்டிகட்டியுள்ளனர். உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின் பிரதிநிதித்துவம் 13 சதவீதமாக குறைவாக உள்ளது எனவும் மத அடிப்படையிலான நியமனம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை. நீதிபதிகளின் பெயர்களை அடிப்படையாகக் கொண்ட அதிகா ரப்பூர்வமற்ற பகுப்பாய்வின் படி பெரும் பான்மை சமூகத்தை சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளனர் எனவும்  மற்ற மதச் சிறுபான்மை சமூகங்களின் பிரதி நிதித்துவம் குறைவாக இருப்பதையும் சுடிக்காட்டப்பட்டுள்ளது.