பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட என்.ராமச்சந்திரன்
கேரள முதலமைச்சர் நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல்
கொச்சி காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாத தாக்கு தலில் கொல்லப் பட்ட கேரளத்தின் எடப்பள்ளியைச் (கொச்சி அருகே) சேர்ந்த என். ராமச்சந்திரனின் வீட்டிற்கு முதல மைச்சர் பினராயி விஜயன் ஞாயி றன்று மதியம் (ஏப்.27) நேரில் சென்று ஆறுதல் கூறினார். அமைச்சர் கே.என்.பாலகோபால், சிபிஎம் மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன், எர்ணாகுளம் மாவட் டச் செயலாளர் எஸ். சதீஷ் ஆகி யோர் முதலமைச்சருடன் இருந்த னர். பல வருடங்களாக செய்து வந்த வெளிநாட்டு வேலையை கைவிட்டு 5 ஆண்டுகளுக்கு முன்புதான் ராமச்சந்திரன் தனது வீடு திரும்பி னார். பின்னர் அவர் சிறு தொழிலி லும் ஈடுபட்டார். துபாயிலிருந்து வீடு திரும்பிய ராமச்சந்திரனும் அவரது மனைவி ஷீலாவும், மகள் ஆர்த்தி மற்றும் பேரக் குழந்தைகளுடன், விடுமுறையைக் கொண்டாட 21ஆம் தேதி காலை காஷ்மீ ருக்குப் புறப்பட்டனர். 22ஆம் தேதி மதியம் காஷ்மீர் சென்றடைந்தனர். பயங்கரவாதத் தாக்குதல் 22ஆம் தேதி பிற்பகல் நடந்தது. புதனன்று இரவு நெடும்பாசேரி விமான நிலையத்திற்கு உடல் கொண்டு வரப்பட்டது. கேரள அரசின் சார்பாக அமைச்சர் பி.பிரசாத் உடலைப் பெற்றுக் கொண்டார். ஏப்.25 வெள்ளியன்று பிற்பகல் முழு அரசு மரியாதையுடன் என்.ராமச்சந்திர னின் உடல் தகனம் செய்யப்பட் டது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட னர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் சுற்றுலாப் பயணி கள். 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பள்ளத் தாக்கில் நடந்த மிக மோசமான தாக்குதல் இதுவாகும்.