கடல்வளங்களை சூறையாடும் நோக்கத்தில் ஒன்றிய மோடி அரசு வியாழனன்று புதிய திட்டம் ஒன்றை அறி வித்தது. அதில்,”இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் அமைந்த சில கடல் பகுதிகளை அமைச்சகம் அடை யாளம் கண்டுள்ளது. மற்ற திட்டங் களுக்கு இடையூறு இல்லாமல் அந்த மண்டலங்களில் உள்ள கடல் பகுதியில் சுரங்கம் அமைத்து செயல்படுவதற்கு உரிமைகளை வழங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகளிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கடல் பகுதிகளில் சுரங்கம் அமைக்க தனி யாரிடம் வழங்குவது போன்ற அறிவிப்பை ஒன்றிய மோடி அரசு வெளி யிட்டுள்ளது. இந்த அறிவிப்பு மூலம் மிக விரைவிலேயே கடல் பகுதிகளில் சுரங்கங்கள் அமைக்க ஒன்றிய அரசால் உரிமங்கள் வழங்கப்படுவது உறுதியாகி உள்ளது. ஏற்கெனவே கடலோரங்களில் உள்ள கனரக தொழிற்சாலை மற்றும் எண்ணெய்க் கழிவுகளால் கடலோரங்கள் மிகவும் மாசடைந்துள்ள நிலையில், தற்பொழுது கனிம சுரங்கங்கள் அமைக்கப்பட்டால் கடல்வளம் கடுமையாக பாதிக்கப்பட்டு, மீன்வளம் முற்றிலும் அழிந்துபோகும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. தனியாரிடம்... கடல் பகுதியில் சுரங்கம் அமைத்து செயல்படுவதற்கு உரிமைகளை வழங்கு வது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்ச கங்கள் மற்றும் துறைகளிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது என ஒன்றிய மோடி அரசு கூறியுள்ளது. ஆனால் கடல் பகுதி யில் அமைக்கப்படும் சுரங்கங்களை அரசு பொதுத்துறை நிறுவனங்கள் ஏற்கிறது என அறிவிப்பில் கூறப்படவில்லை. உரிமம் வழங்கப்படும் என மொட்டை யாகவே கூறப்பட்டுள்ளது. அதாவது யார் வேண்டுமானாலும் உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என தனியாருக்கு வழங்க உள்ளது போன்ற அறிவிப்பை வெளி யிட்டுள்ளது.
அதானிக்காகவா?
நாட்டில் துறைமுகங்கள், நிலக்கரி சுரங்கங்கள், எண்ணெய் வளங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளும் பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான அதானி கைகளில்தான் உள்ளது. குறிப்பாக மோடி அரசால் உருவாக்கப்படும் அனைத்து திட்டங்களும், அறிவிப்புகளும் அதானிக்கு சாதகமாகவே உள்ளது. இந்நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் கடல் பகுதியிலும் கனிமச்சுரங்கம் அமைக்கலாம் என்ற திட்டம் ஏறக்குறைய அதானிக்காக உருவாக்கப்பட்டுள்ள திட்டம்தான் என மறைமுக தகவல் வெளியாகியுள்ளது.