states

சம்பா பயிர்களுக்கான குறைந்த பட்ச விலை விரைவில் அறிவிக்கப்படும்:

புதுதில்லி, அக்.15- சம்பா பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலை விரைவில் அறி விக்கப்படும் என ஒன்றிய விவசா யத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் சனிக்கிழமை தெரிவித்தார். இது தொடர்பாக சனிக்கிழமை அவர் கூறியதாவது: பருவமழையால் பயிர்கள் சேதம டைந்துள்ளன. கணக்கெடுப்பு நடந்து வருகிறது. சேதத்தின் அளவை மதிப்பீடு செய்வதற்கு மாநிலங்களின் தரவுக ளுக்காக காத்திருக்கிறோம். விவசாயிகள் பருவமழையைத் தான்  நம்பியிருக்கிறார்கள். ஆனால், பருவமழையை கணிக்க முடியாது. மாநில அரசுகளிடம் மாநில பேரிடர் நிவாரண நிதி உள்ளது, அவற்றை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க பயன்படுத்தலாம். சேதத்தின் அளவை மதிப்பீடு செய்த பிறகு  தேசிய பேரி டர் நிவாரண நிதியிலிருந்து கூடுதல் நிதி விடுவிக்கப்படும். சம்பா பயிர்க ளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றார். சம்பா பயிர்கள், குறிப்பாக எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்பு வகை களை  நாடு முழுவதும் விதைக்கத் தொடங்கியுள்ளனர், இதுவரை சுமார் 7.34 லட்சம் ஹெக்டேர் பரப்பில் விதைப்பு நடைபெறுகிறது என ஒன்றிய வேளாண் அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.