states

img

இ.கே.நாயனார், சடையன் கோவிந்தனுக்கு அருகில் கோடியேரிக்கு நினைவிடம்

கண்ணூர், அக்.3- கேரளத்தின் இடதுசாரி இயக்கத்தை முன்னெடுத்த மாபெரும் தலை வர்கள் ஓய்வெடுத்து வருகிற பையாம்பலம் கடற்கரையில் கேரள முன்னாள் முதல்வர் இ.கே.நாயனார், முன்னாள் மாநிலச் செயலாளர் சடையன் கோவிந்தன் ஆகியோரின் நினைவிடங்களுக்கு நடுவே கோடியேரியின் உடல் தகனம் செய்யப்பட்டது. கோடியேரிக்கு இங்கு நினைவு மண்டபமும் கட்டப்படவுள்ளது. பையாம்பலம் கடற்கரையில் அழிக்கோடன் ராகவன், ஏ.கே.கோபா லன், சுகுமார் அழிக்கோடன், என்.சி.சேகர்,  ராமகிருஷ்ண பிள்ளை ஆகி யோரின் நினைவிடங்களும் அருகில் உள்ளன. இங்கு கோடியேரி பாலகிருஷ்ணனின் இறுதி நிகழ்ச்சிகளுக்காக பெரிய பந்தல் அமைக்  கப்பட்டது. பையாம்பலம் பூங்காவில் உள்ள திறந்தவெளி அரங்கில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.