புதுதில்லி,டிச.23- ஜேஇஇ தேர்வுக்கு தமிழ்நாடு மாணவர்கள் விண்ணப்பிப்பதில் உள்ள பிரச்சனைக்கு உடனடி யாக தீர்வுகாணப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை மக்களவை உறுப்பி னர் சு. வெங்கடேசனிடம் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வாக்குறுதி அளித்தார்.இது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: ஜேஇஇ (JEE) 2023 விண்ணப் பம் செய்யும் நடைமுறை துவங்கப்பட்டுள்ளது. இதில் 2020- 21 இல் 10 ஆம் வகுப்பு முடித்த தமிழ்நாடு மாணவர்கள் விண்ணப்பம் செய்வதில் பிரச்ச னை எழுந்துள்ளது. லட்சக்கணக் கான மாணவர்கள் இதனால் தவிப்பிற்கும் மன உளைச்ச லுக்கும் ஆளாகியுள்ளார்கள். 2020 - 21 கல்வியாண்டில் கோவிட் காரணமாக பொதுத் தேர்வுகளை நடத்த இயலாத தால் “எல்லோரும் தேர்ச்சி” (All Pass) என்ற முடிவு தமிழக அரசால் எடுக்கப்பட்டது. ஆகவே மதிப்பெண் அட்டையில் “தேர்ச்சி” (Pass) என்று மட்டுமே பதிவாகி இருக்கும். தற்போது ஜேஇஇ 2023 விண்ணப்பிக்கும் போது 10 ஆம் வகுப்பு மதிப்பெண் விவரங் களை சம்பந்தப்பட்ட இணைய தள படிவத்தில் கேட்கப்பட்டுள் ளது. மதிப்பெண் குறிப்பிடப்பட வில்லையென்றால் விண்ணப்பம் பதிவாக மறுக்கிறது. இத னால் லட்சக்கணக்கான தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்க இய லாத நிலை உருவாகியுள்ளது. உடனடியாக ஒன்றிய கல்வி அமைச்சகம் தலையிட்டு இப் பிரச்சனையை சரி செய்து தீர்வு வழங்க வேண்டுமென்று கோரி ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் கடிதம் ஒன்றை அளித்து நேரில் வலியுறுத்தி னேன். இப்பிரச்சனையில் உடனடி யாக தலையிட்டு தமிழக மாணவர்களுக்கு தீர்வு வழங்குவ தாக அமைச்சர் வாக்குறுதி தந்தார். இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.