states

img

பாகிஸ்தானை விடவும் பாதுகாப்பற்ற நாடானது இந்தியா!

புதுதில்லி, அக். 29 - உலகில் பட்டினி நிலவும் நாடுக ளின் 2022-ஆம் ஆண்டிற்கான தரவரி சையில் இந்தியா மோசமான இடத்தையே பிடித்தது. அயர்லாந்தைச் சேர்ந்த ‘கன்சர்ன் வேர்ல்ட்வைட்’ (Concern World wide) அமைப்பும், ஜெர்மனியைச் சேர்ந்த ‘வெல்ட் ஹங்கர் ஹில்ப்’ (Welt  Hunger Hilfe) அமைப்பும் இணைந்து, இந்த பட்டினி நாடுகளின் தர வரிசையை (Global Hunger  Index -GHI) கடந்த வாரம் வெளி யிட்டிருந்தன. இதில், ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 121 நாடுகளில் இந்தியா மிகமோசமாக 107-ஆவது இடத் தையே பிடித்தது. இந்த தரவரிசை யில் பாகிஸ்தான் 99-ஆவது இடத்தைப் பிடித்து, இந்தியாவைக் காட்டிலும்  மேம்பட்ட நிலையை வெளிப்படுத்தி யது.

இந்நிலையில்தான் உலக சட்டம் ஒழுங்கு தரவரிசைப் பட்டியல் தற் போது வெளியாகி இருக்கும் நிலை யில், இதிலும் பாகிஸ்தானைக் காட்டி லும் இந்தியா மோசமான இடத் திற்குப் போயிருக்கிறது. உலகளாவிய பகுப்பாய்வு நிறுவ னமான கல்லப்ஸ், உலகில் மிகவும் பாதுகாப்பான மற்றும் குறைந்த பாது காப்பு கொண்ட நாடுகள் குறித்து 121 நாடுகளில் ஆய்வு செய்து, அத னடிப்படையில், ‘உலக சட்ட - ஒழுங்கு குறியீட்டை (Gallup’s Law  and Order Index -2022) தயாரித்துள் ளது. இதில் பாகிஸ்தான் 82 மதிப்பெண் களுடன் 48-ஆவது இடத்தைப் பிடிக்க,  இந்தியாவோ 80 மதிப்பெண்களுடன் 60-ஆவது இடத்திற்கு போயிருக் கிறது. கடந்த ஆண்டு வெளியிடப் பட்ட அறிக்கையில், இந்தியா 81 மதிப் பெண்களுடன் 56-ஆவது இடத்தில் இருந்தது என்ற நிலையில், தற்போது அதைக்காட்டிலும் மோசமான இடத்தைப் பிடித்துள்ளது. மக்களின் தனிப்பட்ட பாதுகாப்பு உணர்வு மற்றும் குற்றம் மற்றும் சட்ட அமலாக்கத்தில் அவர்களின் தனிப் பட்ட அனுபவங்கள் ஆகியவற்றை அளவிட இந்த ஆய்வில் நான்கு கேள்விகள் எழுப்பப்பட்டு, அவற்று க்கு 121 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1 லட்சத்து 27 ஆயிரம் பேரிடமிருந்து பதில்கள் பெறப்பட்டுள்ளன. 

1) நீங்கள் வசிக்கும் நகரம் அல்லது பகுதியில், உள்ளூர் காவல் துறை மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?; 2) நீங்கள் வசிக்கும் நகரம் அல்லது பகுதியில் இரவில் தனி யாக நடப்பதை நீங்கள் பாதுகாப்பாக உணர்கிறீர்களா?; 3) கடந்த 12 மாதங்க ளுக்குள், உங்களிடமிருந்தோ அல்லது மற்றொரு குடும்ப உறுப்பினரிடமி ருந்தோ பணம் அல்லது சொத்து  திருடப்பட்டதா? 4) கடந்த 12 மாதங்க ளில், நீங்கள் தாக்கப்பட்டீர்களா அல்லது கடத்தப்பட்டீர்களா? என்ற அந்த நான்கு கேள்விகளுக்கு கிடைத்த பதில்களில் இருந்தே உலக சட்டம் ஒழுங்கு குறியீடு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் 15 வயதுக்கு மேற்பட்ட சுமார் 1000 பேரிடம் நேர் காணல் செய்யப்பட்ட நிலையில், அவர்களில் உலக அளவில் 10 பேரில் ஏழு பேர் தாங்கள் வசிக் கும் இடத்தில் இரவில் தனியாக நடப் பதை பாதுகாப்பாக உணர்வதாக வும், தங்கள் உள்ளூர் காவல்துறை யினர் மீது மக்கள் நம்பிக்கை வைத்தி ருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதன்படி உலகிலேயே அதிக பாதுகாப்பு நிறைந்த நாடாக சிங்கப் பூர் 96 மதிப்பெண்களுடன் முதலி டத்தைப் பிடித்துள்ளது. சிங்கப்பூரு க்கு அடுத்தடுத்த இடங்களில் தஜிகிஸ்தான் (95), நார்வே (93), சுவிட்சர்லாந்து (92), இந்தோனேசியா (92), ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - 92  ஆகிய நாடுகள் வந்துள்ளன. சியர்ரா  லியோன் (59), டிஆர் காங்கோ (58), வெனிசுலா (55), காமோன் (54), ஆப்கா னிஸ்தான் (51) ஆகிய 5 நாடுகள் கடைசி இடத்தில் உள்ளன. இதில் சியர்ரா லியோனும், காங்கோவும் ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த நாடு கள் ஆகும். பசியும், நோயும் வாட்டி வதைக்கும் ஆப்பிரிக்கா வில் பயங்கரவாதம் தலைதூக்கி வரு வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.  கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட இரண்டு கணக்கெடுப்புகளிலும் மிகக் குறைந்த மதிப்பெண்ணைப் பெற்ற ஆப்கானிஸ்தான் (தொற்றுநோய் காரணமாக 2020 இல் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை) - தலிபான்களின் கிளர்ச்சி முடிவடைந்ததைத் தொ டர்ந்து, கடந்த சில ஆண்டுகளைக் காட்டிலும் தற்போது மேம்பட்டி ருக்கிறது. 

அரசுக்கு எதிரான போராட்டங்கள், அத்துமீறல்கள் போன்றவற்றால் அமெரிக்கா, கனடா, மேற்கு ஐரோப் பிய நாடுகளும் பாதுகாப்பு விஷ யத்தில் பின்னடைவை சந்தித்திருப்ப தாக புள்ளி விவரங்கள் தெரி விக்கின்றன. கனடா - 87, ஜப்பான் - 86, பிரான்ஸ் - 85, ஆஸ்திரேலியா - 84, அமெரிக்கா, இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் - 83 என மதிப்பெண் களைப் பெற்றுள்ளன. ஈரான், பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய நாடுகள் 82 மதிப்பெண்களைப் பெற, இலங்கை இந்தியா, இராக் ஆகிய நாடுகள் 80 மதிப்பெண்களைப் பெற்றுப் பின்தங்கியுள்ளன. இந்த மாதத்தில், உலக நீதித் திட்டம் அமைப்பு, சட்டத்தின் ஆட்சி நிலவும் நாடுகளின் தரவரிசைப் பட்டி யலை (Rule of Law Index)வெளி யிட்டிருந்தது. பொறுப்புக்கூறல் (அரசு மற்றும் தனியார் அமைப்பு கள்), நீதிச் சட்டம் (தெளிவான மற்றும் நிலையான சட்டம்), வெளிப்படை யான அரசாங்கம் (அணுகக்கூடியது) மற்றும் பாரபட்சமற்ற நீதி அமைப்பு ஆகியவற்றை குறிகாட்டிகளாக கொண்டு, 140-க்கும் மேற்பட்ட நாடுக ளில் அந்த ஆய்வு நடைபெற்றது. இதிலும் இந்தியா 77-ஆவது இடத்தையே பிடித்தது குறிப்பிடத் தக்கது.