புதுதில்லி, டிச. 5 - இந்தியாவிடமிருந்து தேயிலை மற்றும் பாசுமதி அரிசியை இறக்குமதி செய்யும் ஆர்டர்களை ஈரான் திடீரென ரத்து செய்துள்ளது. இதனால், இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிடம் வர்த்தக உறவைக் கொண்டி ருக்கும் நாடுகளில் ஈரான் முக்கியமானதாகும். அமெரிக்கா தடை விதித்தபோதும், ஈரானிடமிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய்யை கொள் முதல் செய்து வருவதுடன், தேயிலை, பாசுமதி அரிசி ஆகியவற்றை இங்கிருந்து ஏற்றுமதியும் செய்து வருகிறது. இந்நிலையில்தான், கடந்த வாரம் முதல் இந்தியா வர்த்தகர்களிடம் தேயிலை மற்றும் பாசுமதி அரிசி வாங்குவதற்கான புதிய ஆர்டர்களை ஈரான் வர்த்தகர்கள் நிறுத்தியுள்ளனர். இந்தத் திடீர் முடி வுக்கான காரணத்தை ஈரான் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கவில்லை. ஈரானில் ஹிஜாப் அணிவதைக் கட்டாயமாக்கும் விதிமுறையை எதிர்த்து அந்நாட்டு மக்கள் தீவிர மான போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதனால் ஈரான் நாட்டின் பெரும்பாலான கடைகள், ஹோட்டல் கள், சந்தைகள் மூடப்பட்டுள்ளன.
இதனால் வர்த்த கம் செய்ய ஏதுவான சூழ்நிலை இல்லாத காரணத் தால் புதிய ஆர்டர்களை அவர்கள் நிறுத்தி வைத்தி ருக்கலாம் என்று கூறப்படுகிறது. இன்னொரு புறத்தில், இந்தியா - ரஷ்யா இடையே ரூபாய் - ரூபிள் வாயிலான பணப்பரிமாற்றத்தைப் போல இந்திய அரசும், ஈரான் அரசும் தத்தமது நாடுகளின் நாணயத்தின் வாயிலாகவே பேமெண்ட் செய்யும் முயற்சியில் இறங்கி, அதற்கான பேச்சுவார்த்தை யைத் துவங்கியுள்ளது. ஈரான் நாட்டிலிருந்து இந்தி யாவுக்கான புதிய ஆர்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்ட தற்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இவ்வாறு காரணம் எதுவாக இருந்தாலும், ஈரான் இறக்குமதியாளர்களின் முடிவால், இந்தி யாவின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது மட்டும் உண்மை. ஏனெனில், இந்தியாவிலிருந்து ஈரான் நாட்டிற்கு ஆண்டொன்றுக்கு சுமாக் 30 முதல் 35 மில்லியன் கிலோ தேயிலை மற்றும் 1.5 மில்லியன் கிலோ பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.