அரசுத் திட்டங்களை வீடியோவில் பார்க்கும் புதிய வசதி அறிமுகம்
சென்னை,பிப்.1- தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் மக்கள் நலன் சார்ந்த மகத்தான திட்டங்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வீடியோ பதிவு மூலம் மக்களிடம் தெரிவிக்கும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாநில அரசின் திட்டங்களை மக்கள் அறிந்துக் கொண்டு பயன்பெறும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில நாளி தழ்கள் வழியாக இந்த திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறது. இதில் புதிய வியூகமாக, நாளிதழில் வரும் விளம்பரத்துடன் இடம் பெறும் கியூ.ஆர்.கோடு செல்போன் மூலம் ஸ்கேன் செய்து பார்த்தால் அரசின் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் வீடியோ பதிவை பார்க்க முடியும். ‘ஆகு மெண்டட் ரியாலிட்டி தொழில் நுட்பம்’ மூலம் இந்த வீடியோ பதிவு வெளியிடப்படுகிறது. பிப்.1 முதல் தமிழ்நாட்டுப் பெண்கள் வாழ்வில் முன்னேற்றத்தை தந்த விடியல் பயணத் திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் வீடியோவை இதில் காணலாம்.
தமிழ்நாட்டில் 100 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்
சென்னை,பிப்.1- மக்களவைத் தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் (டிஎஸ்பி) 100 பேரை பணியிட மாற்றம் செய்து காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணி புரியும் காவல் துறையினர் உடனடி யாக மாற்ற வேண்டும் என ஏற்கெனவே சுற்றறிக்கை அனுப்பி இருந்த நிலை யில், இந்த இடமாற்றம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் தொடர்ச்சி யாக ஐ.ஜி.க்கள் முதல் காவலர்கள் வரை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள் ளனர். விரைவில் மக்களவைக்கு தேர்தலை நடைபெற உள்ளதை யொட்டி தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டதற்கிணங்க காவல்துறையி னர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரூ.1.8 லட்சம் மோசடி
சென்னை,பிப்.1- சென்னை வட பழனியைச் சேர்ந்த ஸ்ரீதரன்(51) தியாகராய நகர் காவல் துணை ஆணையரிடம் புகார் அளித்துள் ளார். அதில், பயண டிக்கெட்டை ரத்து செய்வதற்கு இணையதளத்தில் பதிவிடப்பட்டிருந்த 9832603458 என்ற எண்ணுக்கு அழைத்து அந்த நபர் தனது வங்கி விவரங்களை வழங்க, சில நிமிடங்களில் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.8 லட்சம் எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் ஐஆர்சிடிசி இணையதளத்தில் பதி விடப்பட்டிருந்த மொபைல் நம்பர், ரயில்வே நிர்வாகத்தால் பதிவிடபட வில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து ஐஆர்சிடிசி இணைய தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து வடபழனி காவல் துறை யினர் விசாரணை நடத்தி வருகின்ற னர்.
ரூ. 47 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை
சென்னை,பிப்.1- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழனன்று (பிப். 1) சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.47,040-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.5,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 20 பைசாக்கள் குறைந்து ஒரு கிராம் ரூ.77.80 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 77,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டிற்கு கூடுதல் நிதி ஒதுக்க அமைச்சர் பி.கே. சேகர்பாபு வலியுறுத்தல்
சென்னை,பிப்.1- சென்னை வளசரவாக்கத்தில் அகத்தீஸ்வரர் கோவிலில் மறு சீரமைப்பு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப் பில் அவர் கூறியதாவது:- மழை, வெள்ள பாதிப்புகளால் தமிழகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள் ளது. தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு முறையாக நிதி வழங்க வில்லை. தேவைகள் அதிகமாக இருப்பதால் ஒன்றிய அரசு தனது பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை யின் சார்பில் கோவில்கள், தேர்கள், பசு மடங்கள், தங்குமிடங்கள், விருந்து மண்டபங்கள் என்று 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணிகள் ரூ.4,157 கோடியில் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
‘தோல் கொள்கையை வெளியிட்ட பிறகு ரூ.6000 கோடி முதலீட்டை ஈர்த்த தமிழ்நாடு’
சென்னை,பிப்.1 2022 ஆம் ஆண்டில் காலணி மற்றும் தோல் கொள்கையை மாநில அரசு வெளியிட்ட பிறகு, கடந்த ஓராண்டில் தமிழ்நாடு ரூ.6,000 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளது என்று தோல் ஏற்றுமதி கவுன்சில் (சிஎல்இ) தலைவர் ராஜேந்திர குமார் ஜலான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு உள்ளிட்ட ஒன்றிய, மாநில அரசுகளின் சாதகமான கொள் கைகள், உலகளாவிய பிராண்டு களை இந்தியாவில் முதலீடு செய்ய வைக்கின்றன என்று அவர் கூறினார். இந்திய சர்வதேச தோல் கண்காட்சியின் 37வது பதிப்பு சென்னை வர்த்தக மையத்தில் பிப்ரவரி 1 ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 3 வரை நடைபெறவுள்ள இந்த கண்காட்சி குறித்து செய்தி யாளர்களிடம் பேசுகையில் இதனை அவர் தெரிவித்தார். இந்தாண்டு தோல் கண்காட்சி 450க்கும் மேற் பட்ட உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்த்துள்ளது. ஒன்றிய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத் தின் நிதியுதவியுடன், வடிவமைப்பு கண்காட்சியும் இதோடு நடைபெற வுள்ளது. இதில் சுமார் 38 வெளி நாட்டு மற்றும் இந்திய வடிவமைப் பாளர்கள் தங்கள் வடிவமைப்பு முன்மாதிரிகள் மற்றும் புதுமை களைக் காட்சிப்படுத்தவுள்ளனர். 5 ஆண்டுகளில் 10 பில்லியன் டாலர் விளையாட்டு காலணி ஏற்றுமதியை தமிழ்நாடு செய்ய முடியும் என்று சிஎல்இ மண்டல தலைவர் (தெற்கு) இஸ்ரார் அகமது கூறினார்.