கொல்கத்தா, மார்ச் 1- அமெரிக்க உள்ளிட்ட நேட்டோ நாடுகள் உக்ரைனை, ரஷ்யாவுக்கு எதிராக தூண்டிவிட்ட நிலையில், ரஷ்யா தற்போது உக்ரைனுக்கு எதி ராக ராணுவ நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. இந்நிலையில், உக்ரைன் - ரஷ்யா இடையிலான ராணுவ மோதலால், பொருளாதார ரீதியாக இந்தியாவுக்கு ரூ.1 லட்சம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ ஆய்வறிக்கை கூறி யுள்ளது. இதுதொடர்பாக ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது அறிக் கையில் குறிப்பிட்டிருப்பதாவது: உக்ரைன் விவகாரத்தால் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை கடந்து விட்டது.
அத்துடன் ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்களின் விலையும் அதிகரித்து உள்ளது. எனவே, விலையை கட்டுப்படுத் துவதற்காக பெட்ரோலியப் பொருட்க ளுக்கான கலால் வரியை ஒன்றிய அரசு குறைத்தால், மாதம் ஒன்றுக்கு ரூ. 8 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற் படும். இவ்வாறு குறைக்கப்படும் கலால் வரி அடுத்த நிதியாண்டிலும் தொட ர்ந்து, 2023-ஆம் நிதியாண்டில் பெட்ரோல் மற்றும் டீசல் நுகர்வும் சுமார் 8 முதல் 10 சதவிகிதம் அதிக ரித்தால், 2023 நிதியாண்டில் அரசின் வருவாய் இழப்பு சுமார் ரூ. 95 ஆயிரம் கோடி முதல் ரூ. 1 லட்சம் கோடி வரை இருக்கும். ஜனவரி 2022-இல் சில்லரைப் பணவீக்கம் மீண்டும் 6.01 சதவிகித மாக உயர்ந்துள்ளது.
மார்ச் 2022-ல் பணவீக்கம் 4.7 சதவிகிதமாக இருக் கும் என ரிசர்வ் வங்கி (RBI) எதிர் பார்க்கிறது. 2022-23 நிதியாண்டிற்கு, சில்லரை விலைப் பணவீக்கம் 4.5 சதவிகிதமாக இருக்கும் எனவும் ஆர்பிஐ கணித்துள்ளது. இருப்பினும், கச்சா எண்ணெய் விலை உயர்வு உட்பட பல காரணிகளால் பணவீக்கத்திற்கு தலைகீழ் அபாயங்கள் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். கச்சா எண்ணெய் விலை உயர்ந்த மட்டத்தில் இருந்து 67 சதவிகிதம் வீழ்ச்சியடைய சுமார் 18 மாதங்கள் ஆகும் என்று 2018 முதலான முந்தைய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. விலைமதிப்பற்ற உலோகங்க ளான தங்கம், பல்லேடியம் மற்றும் பிளாட்டினம் ஆகியவற்றிலும் பண வீக்கம் ஏற்படலாம். உக்ரைன் விவ சாயப் பொருட்களின் முக்கிய ஏற்று மதியாளராக இருப்பதால், கருங்கட லில் வழிசெலுத்தலில் தொந்தரவு செய்யப்பட்டால் கோதுமை மற்றும் சோளத்தின் விலையிலும் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ தெரிவித்துள்ளது.