states

img

பிபிசி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித்துறை அறிக்கை!

புதுதில்லி, பிப்.18- இங்கிலாந்து நாட்டின் அரசுத்துறை  செய்தி ஒளிபரப்பு நிறுவனமான ‘பிபிசி’, ‘இந்தியா- மோடி என்கிற கேள்வி’ என்ற  தலைப்பில் இரண்டு பாகங்களைக் கொண்ட ஆவணப் படம் ஒன்றை, ஜன வரி 17 மற்றும் 23 தேதிகளில் வெளி யிட்டது. இந்த ஆவணப்படத்தின் முதற் பாக மானது, 2002-ஆம் ஆண்டு குஜராத் மதக் கலவரத்தை அப்போதைய முதல்வர்  மோடி தடுக்கவில்லை என்பதையும், இரண்டாம் பாகமானது, சிஏஏ,  என்பிஆர் எதிர்ப்பு போராட்டங்களின் போது ஏற்பட்ட கலவரத்தை ஒன்றிய  ஆளும் பாஜக அரசு கட்டுப்படுத்த வில்லை என்பதையும் ஆதாரப்பூர்வ மாக அம்பலப்படுத்தியது. இந்தப் பின்னணியில், இந்தியா வின் வருமான வரிச் சட்டத்தின் ‘டிரா ன்ஸ்பர் பிரைசிங்’ விதிமுறையை ‘பிபிசி இந்தியா’ மீறியிருப்பதாகக் கூறி, மோடி அரசின் வருமான வரித்துறையா னது, கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி காலை 11.30 மணியளவில், பிபிசி இந் தியா நிறுவனத்தின் தில்லி, மும்பை அலுவலகங்களுக்குள் புகுந்து சோதனை  நடத்தியது. பிப்ரவரி 16 பின்னிரவு 11 மணிவரை சுமார் 60 மணிநேரமாக இந்த சோதனை நடைபெற்றது.

இதற்கு நாடு முழுவதும் கண்ட னங்கள் எழுந்தன. தனக்கு எதிரான ஆவ ணப்படத்தை வெளியிட்டதற்காக, மோடி அரசு பழிவாங்கும் நடவடிக்கை யில் ஈடுபட்டுள்ளதாகவும், பத்திரிகை  சுதந்திரத்தை மோடி அரசு பறிக்க முயல்  வதாகவும், ஜனநாயகத்தின் நான்கா வது தூண் எனப்படும் பத்திரிகையின் மீதான இந்த தாக்குதல் மக்களின் குரலை ஒடுக்குவதற்கு ஒப்பாகும் என் றும் ‘இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம்’, சர்வதேச மனித உரிமை அமைப்பான ‘ஆம்னெஸ்டி’, மும்பை  செய்தியாளர் சங்கம், காங்கிரஸ், மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, ராஷ்ட்ரிய ஜனதாதளம், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ்  உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டனம்  தெரிவித்தன. இதனிடையே, வருமான வரிச்  சட்ட விதிகளை மீறியதாக புகார்  எழுந்ததன்பேரிலேயே, பிபிசி அலுவல கங்களில் ஆய்வு நடத்தப்பட்டதாக வும், இந்த ஆய்வில் பிபிசி நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது கண்டறி யப்பட்டு உள்ளதாகவும் வருமான வரித் துறை அதிகாரப்பூர்வமாக விளக்  கம் அளித்துள்ளது.

பிபிசியின் நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிடாமல் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், “வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 133ஏ விதிகளை மீறி யிருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து,  தில்லி, மும்பையில் உள்ள சர்வ தேச செய்தி நிறுவன (பிபிசி) அலுவல கங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த நிறுவனம் ஆங்கிலம், இந்தி மற்றும்  பல்வேறு இந்திய பிராந்திய மொழி களில் செய்திகளை வெளியிட்டு வரு கிறது. விளம்பரங்கள் மூலம் வருவாய் ஈட்டி வருகிறது. ஆங்கிலம் தவிர்த்து இந்திய பிராந்திய மொழிகளின் செய்தி சேவையில் பிபிசி ஈட்டிய விளம்பர வருவாயில் முரண்பாடுகள் உள்ளன. உண்மையான வருவாய்க்கு ஏற்ப அந்த நிறுவனம் வரி செலுத்தவில்லை. பல்வேறு முறைகேடுகள் கண்ட றியப்பட்டுள்ளன. வெளிநாடுகளை சேர்ந்த தற்காலிக ஊழியர்களுக்கு பிபிசி நிறுவனம் ஊதி யம் வழங்கியிருக்கிறது. சட்டவிதி களின்படி இந்த ஊதியத்துக்கு வரி செலுத்த வேண்டும். ஆனால், பிபிசி முறையாக வரி செலுத்தவில்லை. வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்கள், டிஜிட் டல் ஆதாரங்கள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. பிபிசி ஊழி யர்கள் அளித்த வாக்குமூலம் முக்கிய  ஆதாரங்களாக சேர்க்கப்பட உள்ளன. வருமான வரித் துறை ஆய்வின் போது பிபிசி நிறுவனம் போதிய ஒத்து ழைப்பு வழங்கவில்லை. எனினும்,  அதன் செய்தி சேவையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் ஆய்வு நடத்தப்பட்டது” என்று கூறப்பட்டு உள்ளது.