பெங்களூரு, மே 8 - “கர்நாடகத்தில் பெறப்பட்ட 40 சத விகித கமிஷன் தொகையில், டபுள் என்ஜின் அரசுகளுக்கு தலா எவ்வளவு கிடைத்தது?” என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடக மாநிலம் ஆனெக்கல்லில் ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது இதுதொடர்பாக அவர் கூறி யிருப்பதாவது: “கர்நாடகாவில் கிடைத்த 40 சத விகித கமிஷனில் டபுள் என்ஜின் அரசுக்கு தலா எவ்வளவு பங்கு? என்று பிர தமர் மோடி பதிலளிக்க வேண்டும். நான் நாடாளுமன்றத்தில் அதானி பற்றி கேள்வி எழுப்பியதால், எனது எம்.பி. பதவியை பிரதமர் மோடி பறித்தார். இப்போது, கர்நாடகாவில் இருந்து உங்களுக்கு கிடைத்த கமிஷன் எவ்வளவு என்று மாநில மக்களிட மாவது சொல்லுங்கள். காண்ட்ராக்டர் சங்கத்தினர், பிரதமர் மோடிக்கு 40 சதவிகித கமி ஷன் குறித்து கடிதம் எழுதினர். ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை. கர்நாடக எஸ்ஐ ஆட்சேர்ப்பில் முறைகேடு, உதவி பேராசிரியர்கள் பணி நியமனத்தில் லஞ்சம், உதவி என்ஜீனி யர்கள், கர்நாடக சோப் மற்றும் டிடர்ஜெண்ட் நிறுவனத்தில் முறைகேடு இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். மைசூர் சாண்டல் முறைகேட்டில் பாஜக எம்எல்ஏ மகன் ரூ. 8 கோடி பணத்துடன் சிக்கினார். அதே போல் ரூ. 2500 கோடிக்கு பாஜக-வில் முதல்வர் பதவி விற்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
கர்நாடகாவில் ஊழல் நடப்பது 6 வயது குழந்தைக்கும் தெரியும். ஆனால் பிரதமர் மோடி, தன்னை காங்கிரஸ் 91 முறை அவதூறாக பேசியது என்று கணக்கிடுகிறார். கர்நாடக ஊழலை தடுக்க என்ன நட வடிக்கை எடுத்தீர்கள் என்று முதலில் சொல்லுங்கள். எத்தனை விசாரணை நடந்தது. எத்தனை பேர் சிறையில் உள்ளார்கள். கர்நாடகாவில் டபுள் என்ஜின் அரசுதான் நடக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். கவுதம் அதா னியுடன் உங்களுக்கு என்ன தொடர்பு. இதை நான் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினேன். உடனே என்னை எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்து விட்டீர்கள். ஊழலை பற்றி கேட்ட தால் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றி விட்டீர்கள். நீங்கள் ஊழல் வாதிகளுக்கு எதி ராக ஒருபோதும் பேச மாட்டீர்கள். ஏனெனில், 3 ஆண்டுக்கு முன்பு கர்நாட காவில் ஆட்சிக்கு வந்த அரசே, கொள்ளை அரசுதான். திருட்டு வழி யில்தான் பாஜக ஆட்சிக்கு வந்தது. எனவே, பாஜக-வினர் திருடத்தான் செய்வார்கள். திருட்டை தவிர உங்க ளுக்கு எதுவும் தெரியாது. பாஜக-வில் பிரதமர் மோடியை தவிர வேறு யாரை யும் பேசவிடமாட்டார்கள். பசவராஜ் பொம்மை, எடியூரப்பா இருவரும் ஊழல்வாதிகள். மணிப்பூரில் வன்முறைக்கு 50 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் பிரதம ருக்கும், ஒன்றிய உள்துறை அமைச்ச ருக்கும் அதுபற்றி கவலையில்லை. மணிப்பூர் வன்முறை வெறுப்பு அரசி யலால் நடந்தது. அதனால் தான் வெறுப்பு அரசியலுக்கு எதிராக ஒற்றுமை பயணம் நடத்தினேன்’. இவ்வாறு ராகுல் காந்தி பேசியுள்ளார்.