புதுதில்லி, டிச.10- ஒரே நாடு, ஒரே வரி, ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு என்ற வரிசையில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் என்ற பெயரில் இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் அடுத்த அடியை மோடி அரசு எடுத்து வைத்துள்ளது. இதுதொடர்பாக, பாஜக ஆளும் மாநிலங்களில் அம்மாநில முதல்வர் கள் வாக்குறுதியும் அளித்து உள்ள னர். அண்மையில் நடந்து முடிந்த குஜ ராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலி லும் பொது சிவில் சட்டம் அமல்படுத் தப்படும் என்று பாஜக தேர்தல் வாக்கு றுதி அளித்திருந்தது. இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 7-ஆம் தேதி முதல் தொடங்கி நடை பெற்று வரும்நிலையில், நாடாளு மன்ற மாநிலங்களவையில் ராஜஸ் தான் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. கிரோடி லால் மீனா என்பவர் மூலம், ‘பொது சிவில் சட்டம் - 2020’-ஐ தனி நபர் மசோதாவாக தாக்கல் செய்துள்ளது. பொது சிவில் சட்டம் உருவாக் கம், தேசிய அளவிலான அமலாக்கம் மற்றும் அதுதொடர்பான விவகா ரங்களுக்காக தேசிய கண்காணிப்பு மற்றும் விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்று மசோதா வில் வலியுறுத்தியுள்ளது.
இந்த மசோதாவை, பாஜக எம்.பி. கிரோடி லால் மீனா வெள்ளியன்று தாக்கல் செய்தபோது, காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணாமுல் காங்கிரஸ். ராஷ்ட்ரிய ஜனதாதளம், மதிமுக, சமாஜ்வாதி கட்சி, தேசிய வாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரி வித்தன. பல்வேறு சமூகங்களுட னான பரவலான கலந்துரையாடலை நடத்தாமல், மக்களின் வாழ்வில் இத் தகைய பரந்த மாற்றங்களைக் கொண்ட மசோதாவை அறிமுகப் படுத்த முடியாது; தனிநபர் மசோதா, நாட்டில் நிலவும் சமூக கட்டமைப்பை யும், வேற்றுமையில் ஒற்றுமை எனும் நிலையையும் மொத்தமாக அழித்து விடும் என கண்டனம் தெரிவித்து முழக்கங்களையும் எழுப்பினர். “சட்டக் கமிஷன் பரிந்துரைப் படி, பொது சிவில் சட்டம் தேவையற் றது. அவசியமற்றது” என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் எதிர்ப்பு தெரி வித்தார். திமுக எம்.பி. திருச்சி சிவா பேசும் போது, “பொது சிவில் சட்டம், மதச்சார்பின்மைக்கு எதிரானது” என்றார். சமாஜ்வாதி எம்.பி. ஆர்.ஜி. வர்மா பேசும் போது, “பொது சிவில் சட்ட மசோதா அரசியல் சட்ட விதி களுக்கு எதிரானது” என குறிப்பிட் டார். மதிமுக எம்.பி. வைகோ பேசு கையில், “ஆர்எஸ்எஸ்-இன் சித்தாந் தங்களை ஒன்றன் பின் ஒன்றாக ஒன்றிய பாஜக அரசு அமல்படுத்து கிறது. ஏற்கெனவே காஷ்மீரை முடித்துவிட்டனர். இப்போது பொது சிவில் சட்டத்தைக் கையிலெடுத்துள் ளனர். இது நாட்டின் பேரழிவுக்கு வழிவகுக்கும். சிறுபான்மையின மக் கள் கடுமையாக பாதிக்கப்படுவர்’ என்றார்.
எதிர்க்கட்சிகளுக்கு பதிலளித்த ஒன்றிய அமைச்சர் பியுஷ் கோயல், “அரசியலமைப்பின் வழிகாட்டு கொள்கையின் கீழ் உள்ள ஒரு பிரச் சனையை எழுப்புவதற்கு எம்.பி.க்கு சட்டப்பூர்வமான உரிமை உள்ளது. இந்த மசோதா குறித்து அவை விவா திக்கட்டும். மாறாக, அரசு மீது அவ தூறு எழுப்புவது, அரசை விமர்சிக்க முயற்சி செய்வது தேவையற்றது” என்றார். இதனைத் தொடர்ந்து, அவைத் தலைவரும், குடியரசு துணைத் தலை வருமான ஜக்தீப் தன்கர், பொது சிவில் சட்ட மசோதாவை விவாதத் திற்கு எடுத்துக் கொள்வது குறித்து வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார். அதன்படி நடந்த வாக்கெடுப்பில் மசோதாவை விவாதத்திற்கு எடுத் துக்கொள்வதற்கு ஆதரவாக 63 வாக்குகளும், எதிராக 23 வாக்கு களும் கிடைத்தன.