சேலம், பிப். 17- சேலம், மேட்டூரை யடுத்த கர்நாடக எல்லை அருகே பாலாறு பகுதியில் மீனவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. இவர் கர்நா டக வனத்துறையினரின் துப்பாக்கிசூட்டில் பலியான தாக குற்றச்சாட்டு எழுந்து ள்ளதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. மேட்டூர் அடுத்த கோவிந்தபாடியை சேர்ந்த ராஜா, இளையபெருமாள், தருமபுரி ஏமனூரை சேர்ந்த ரவி ஆகிய மூன்று பேரும் பாலாற்றுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது கர்நாடக வனத்துறையினர், மான் வேட்டைக்கு வந்துள் ளதாக நினைத்து அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி யுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ரவி மற்றும் இளைய பெருமாள் ஆகியோர் தப் பித்துள்ளனர். ஆனால், இவர் களுடன் சென்ற ராஜாவை மட்டும் காணாததால் உற வினர்கள் தேடி வந்தனர். இந்நிலையில், தமிழக கர்நாடக, எல்லையான பாலாறு பகுதி காவிரி ஆற்றில் ராஜாவின் சடலம் மிதப்பதாக தகவல் பரவி யது. இதனையடுத்து, கோவிந்தபாடி கிராம மக்கள் நூற்றுக்கும் மேற் பட்டோர் காவிரி கரையில் குவிந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மேட்டூர் டிஎஸ்பி விஜயகுமார், பவானி டிஎஸ்பி, அமிர்த வர்த்தினி தலைமையில் வந்த போலீசார் காவிரி ஆற்றில் மிதந்த ராஜாவின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீனவர் கர்நாடக வனத்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலி யானதாக தகவல் பரவிய நிலையில், மாநில எல்லை யில் பதற்றம் நிலவுவதால், இரு மாநில எல்லையில் அசம்பாவிதங்களை தவிர்க்க ஏராளமான போலீ சார் குவிக்கப்பட்டுள்ளனர்.