states

உலகச் செய்திகள்

ஈக்குவடாரின் புதிய ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரைத் தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல்களை நடத்துவதற்காக 8 கோடி அமெரிக்க டாலர் ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசியத் தேர்தல் கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்த நிதியில் ஒருபகுதி நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தலுக்கான முதல் சுற்று ஆகியவற்றிற்காக செலவழிக்கப்படும். எஞ்சிய நிதி, இரண்டாம் சுற்றிற்குத் தேவைப்பட்டால் செலவழிக்கப்படும்.

கடந்த நான்கு மாதங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சோமாலி யக் குடிமக்கள் இடம் பெயர வேண்டியிருந்தது என்று அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. ஐக்கிய நாடுகள் அகதிகள் நல முகமை மற்றும் நார்வே அகதிகள் கவுன்சில் ஆகிய இரண்டு அமைப்புகளின் உதவியுடன் பல்வேறு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். மொத்தத்தில் 38 லட்சம் மக்கள் சோமாலியாவில் இடம் பெயர்ந்திருக்கிறார்கள்.

ரஷ்யா மீது தடை போடுவதில் எந்தவித அர்த்தமுமில்லை என்று  ஜார்ஜியாவின் பிரதமர் இராக்லி கரிபஷ்வில் தெரி வித்துள்ளார். இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள அவர், ரஷ்யா மீது தடைகளை ஏற்படுத்தினால் அது ஜார்ஜியாவின் பொருளாதா ரத்தை சேதப்படுத்தி விடும். ஜார்ஜியா குடிமக்களின் நலன்களைப் பாதிக்கும். இத்தனைக்கும் ஐரோப்பிய யூனியன் ரஷ்யாவுடன் மேற்கொள்ளும் வர்த்தகத்தோடு ஒப்பிடுகையில் எங்கள் வர்த்தகம் ஒன்றும் பெரிதல்ல என்றும் குறிப்பிட்டார்.