states

img

சிவராஜ் சிங் சவுகான் வீட்டுமுன்பு தர்ணா நடத்திய திக்விஜய் சிங்

போபால், ஜன.22- மத்தியப்பிரதேச பாஜக முதல் வர் திக்விஜய் சிங் வீட்டு முன்பு, முன்னாள் முதல்வரும், காங்கி ரஸ் மூத்த தலைவருமான திக் விஜய் சிங் தர்ணா போராட்டம் நடத்தினார். மத்தியப் பிரதேசத்தில் 2018- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் 114 இடங்க ளில் வென்று காங்கிரஸ் தனிப் பெரும் கட்சியாக வந்தது. சுயேச் சைகளின் ஆதரவுடன் ஆட்சியும் அமைத்தது.  ஆனால், ஓராண்டிற்கு உள் ளேயே காங்கிரசை உடைத்து, ஜோதிராதித்யா சிந்தியா தலை மையிலான காங்கிரஸ் எம்எல்ஏ-க்களை தன்பக்கம் இழுத்ததன் மூலம் மீண்டும் பாஜக அதிகா ரத்தைக் கைப்பற்றியது. முதல்வ ராக சிவராஜ் சிங் சவுகான் இருந்து வருகிறார். இந்நிலையில், மத்தியப் பிர தேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் அரசு மேற்கொண்டுவரும் டெம் மற்றும் சுதாலியா அணைத் திட் டங்கள் தொடர்பாக சில பிரச்ச னைகள் முன்னுக்கு வந்துள்ளன.

இத்திட்டங்களை நிறைவேற்றி னால், 3 மாவட்டங்களில் சில கிரா மங்களும், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும் தண்ணீரில் மூழ்கி விடும் என்று விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பாக பேசுவதற்கு முதல்வர் சிவராஜ்சிங் சவுகானி டம், முன்னாள் முதல்வரும், மாநி லங்களவை காங்கிரஸ் எம்.பி. யுமான திக்விஜய் சிங் நேரம் கேட்டி ருந்தார். ஆனால் சவுகான் நேரம் ஒதுக்காமல் இழுத்தடித்து வந்தார்.  இதையடுத்து, சிவராஜ்சிங் சவுகான் இல்லம் அருகே தனது ஆதரவாளர்களுடன் திக்விஜய் சிங் தர்ணாவில் இறங்கினார். இந்தப் போராட்டம் 4 மணி நேரத் திற்கும் மேலாக நீடித்துக் கொண்டே போன நிலையில், ஜனவரி 23 அன்று திக்விஜய் சிங் உடனான சந்திப்புக்கு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நேரம் ஒதுக்கி இருப்பதாக முதல்வரின் முதன்மைச் செயலாளர் மணிஷ் ரஸ்தோகி உறுதியளித்தார்.  இதனை ஏற்று, தனது போராட் டத்தை விலக்கிக்கொண்ட திக் விஜய் சிங், 23-ஆம் தேதியும் முதல்வர் சந்திக்காவிட்டால், அணை கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்துவோம் என்று எச்ச ரிக்கை விடுத்துள்ளார்.