பலி எண்ணிக்கை 275 ஆக உயர்வு ; 14 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன
குஜராத் ‘ஏர் இந்தியா’ விமான விபத்து
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து 242 பேருடன் (230 பயணிகள், 2 விமானிகள், 10 பணியாளர்கள்) வியாழக்கிழமை அன்று மதியம் 1:39 மணி அளவில் இங்கிலாந்து தலைநகர் லண்டனை நோக்கி ஏர் இந்தியாவிற்கு சொந்த மான “போயிங் 787-8 ட்ரீம்லைனர் இரட்டை ஜெட் விமானம்” கிளம்பியது. அடுத்த 3 நிமிட இடைவெளியில் விமான நிலையத்திற்கு அருகே மேகானி நகர் குடி யிருப்புப் பகுதியில் உள்ள பி.ஜே.மருத்து வக்கல்லூரி விடுதியில் விமானம் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் ஏர் இந்தியா விமா னத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்தனர். பிரிட்டன் குடியுரிமை பெற்ற விஸ்வேஷ் குமார் மட்டும் உயிர் பிழைத்தார். அதே போல மேகானி நகரில் உள்ள பி.ஜே.மருத்துவக் கல்லூரி விடுதி மற்றும் உணவகம் என இரண்டு கட்டிடங்களில் நேரடியாக மோதியதில், 7 மருத்துவ மாணவர் கள், ஊழியர்கள், மேகானி நகர் குடியிருப்பு வாசிகள் என மேலும் 34 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் குஜராத் விமானம் விபத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 275 ஆக உயர்ந்துள்ளதாக பி.ஜே.மருத்துவக் கல்லூரியின் ஜூனியர் மருத்துவர்கள் சங்கத் தின் தலைவர் தவல் கமேட்டி செய்தியாளர்க ளிடம் தெரிவித்துள்ளார். 14 உடல்கள் அகமதாபாத் மருத்துவமனையில் டிஎன்ஏ மாதிரிகள் மூலம் உடல்கள் அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகி றது. வெள்ளிக்கிழமை அன்று 8 உடல்கள் அடை யாளம் காணப்பட்டு, உறவினர்களிடம் ஒப்ப டைக்கப்பட்ட நிலையில், சனியன்று மேலும் 6 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சனிக்கிழமை அன்று மாலை 6 மணி நிலவரப் படி 275 உடல்களில் வெறும் 14 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன என செய்திகள் வெளியாகியுள்ளன.