புதுதில்லி, ஜூன் 1 - மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி வளர்ச்சியில் கவனம் செலுத்திய தென்மாநிலங்களுக்கு, நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பில் அநீதி இழை க்கப்பட்டால், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவின் மகனும், அம்மாநில தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்ச ருமான கே.டி. ராமாராவ் கூறியுள்ளார். மேலும், அதுபோன்ற ஒரு சூழல் ஏற்பட்டால், தென் மாநிலங்கள் அனைத்தும் ஓரணியில் திரண்டு எதிர்க்க வேண்டும் என்றும் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களை ராமாராவ் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக கே.டி. ராமாராவ் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2026-ஆம் ஆண்டுக்கு பிறகு நாடாளுமன்ற தொகுதி கள் மறுவரையறை செய்யப்படும்போது தென்மாநி லங்களுக்கு அநீதி ஏற்பட்டால் ஒன்றாக குரல் எழுப்ப வேண்டும்.
பொதுவாக தென் மாநிலங்கள் முற்போக்குக் கொள்கைகளுடன் செயல்பட்டு வருகின்றன. இதனால் நாம் மக்கள் தொகையை கட்டுப்படுத்தி வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறோம். ஆனால் வடமாநிலங்களில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை யின்போது வடமாநிலங்களுக்கு புதிய தொகுதிகள் அதிகமாக கிடைக்கலாம். இதன்மூலம் மக்களவையில் வடமாநிலங்களின் பிரதிநிதிகள் அதிகம் இருப்பார்கள். தெற்கே உள்ளவர்கள் குறைந்து காணப்படுவார்கள். மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமல் படுத்துவது குறித்த ஒன்றிய அரசின் ஆலோசனையை ஏற்று நாம் செயல்பட்டு வரும் இந்த வேளையில் நமக்கு குறைந்த தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால் அனைவரும் ஒருசேர குரல் கொடுக்க வேண்டும். நாட்டின் மக்கள்தொகையில் வெறும் 18 சதவிகிதம் பேர் மட்டுமே தென்மாநிலங்களில் இருக்கிறோம். இருப்பி னும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நாம் 35 சத விகிதப் பங்கை செலுத்துகிறோம். நாட்டின் பொருளா தாரம் மற்றும் வளர்ச்சிக்கு பங்களிக்கும் இந்த முற்போக்கு மாநிலங்களை புறக்கணிப்பதற்கு அனு மதிக்கக் கூடாது.’’ இவ்வாறு கே.டி. ராமாராவ் கூறியுள்ளார்.