மோசடிகளை வகைப்படுத்துதல், தேர்ந்தெடுக்கப்பட்ட எப்எல்எஸ் தொடர்பான வழிகாட்டுதல்களுக்கு இணங்கா ததால் ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ. 12.19 கோடி அப ராதம் விதித்தது ரிசர்வ் வங்கி. இதே போல கோடக் மஹிந்திரா வங்கிக்கும் ரூ.3.95 கோடி அபராதம் விதித்துள்ளது ரிசர்வ் வங்கி.
ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட் டத்தில் 25 கிமீ தொலைவில் உள்ள லோட்வா அணையில் குளித்த 12-ஆம் வகுப்பு படிக்கும் 6 மாணவர்கள் நீரில் முழ்கி உயிரிழந்தனர்.
சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தலில் பழங்குடி யினக் குழுக்களால் சமீபத்தில் தொடங்கப்பட்ட ஹமர் ராஜ் கட்சி (HRP) ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி உட்பட 19 வேட்பாளர்களின் பட்டியலை செவ்வாயன்று வெளியிட்டது. சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தெலுங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேவந்த் ரெட்டியை காவல்துறையினர் கைது செய்தனர். இவர் சந்திரசேகர ராவுக்கு எதி ராக போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அபுதாபியில் தங்கி பணியாற்றி வந்த ரஞ்சன் ஸ்வைன் என்ற ஒடிசாவைச் சேர்ந்த இளைஞர் விமானத்தில் வந்த போது காணாமல் போனதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆசிய விளையாட்டுகள் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படும் என ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.
தூய்மைப் பிரச்சாரத்தின் போது குப்பைகளை அகற்றியதன் மூலம் அரசுக்கு ரூ.117 கோடிக் கும் அதிகமான வருவாய் கிடைத்துள்ளது என்று ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.