புதுதில்லி, பிப். 10 - பங்குச் சந்தையில் அதானி குழுமப் பங்குகள் தொடர் சரிவில் இருப்பதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், சந்தை நிலவரம் குறித்து முதலீட்டாளர் என்ற அடிப்படையில் அதானி குழுமத்திடம் விளக்கம் கேட்போம் என்று எல்ஐசி நிறுவனத்தின் தலைவர் எம்.ஆர். குமார் அறி வித்துள்ளா ர். கடந்த ஜனவரி 24 அன்று ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ (Hindenburg Research) நிறுவனத்தின் ஆய்வறிக்கை வெளியான பின்னணி யில், அதானி குழும பங்குகளின் சந்தை மதிப்பு ரூ. 10 லட்சத்து 28 ஆயிரம் கோடி அளவிற்கு சரிந்தது. அதானியின் தனிப்பட்ட சொத்து மதிப்பில் மட்டும் சுமார் 4 லட்சத்து 92 ஆயிரம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டது. உலகின் 3-ஆவது பணக்காரராக இருந்த வர், 17-ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டார். ஆனால், இந்த இழப்பானது, அதானி குழுமத்திற்கு மட்டுமானதாக அல்லாமல், அதானி குழும நிறுவனங் களில் முதலீடு செய்திருந்த பொதுத் துறை மற்றும் தனியார் துறை நிறு வனங்களையும் பாதித்துள்ளது. குறிப்பாக, அதானி குழும நிறு வனங்களில், பொதுத்துறை நிறுவன மான எல்ஐசி (LIC) ரூ. 36 ஆயிரத்து 474 கோடியே 78 லட்சத்தை முதலீடு செய்திருந்தது. இந்த பங்குகளின் சந்தை மதிப்பு, கடந்த 10 நாட்களுக்கு முன்பு ரூ. 74 ஆயிரம் கோடியாக இருந்த நிலையில், தற்போது அந்த சந்தை மதிப்பு ரூ. 43 ஆயிரம் கோடியாக சரிந்து விட்டது; இதன்மூலம் எல்ஐசி-க்கு சுமார் ரூ. 31 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகின.
இது எல்ஐசி பாலிசிதாரர்கள் மத்தி யில் குழப்பத்தை ஏற்படுத்தியது. தங்களின் பணம் பாதுகாப்பதாகத்தான் உள்ளதா? என்ற சந்தேகத்தை அவர்கள் கிளப்பினர். அதானி குழு மத்தில் எல்ஐசி செய்துள்ள முதலீடா னது, எல்ஐசி-யின் ஒட்டுமொத்த முதலீடுகளில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவு என எல்ஐசி நிறுவனம் விளக்கம் அளித்தாலும், அதானி குழு மத்திற்கு எல்ஐசி பெரிய முதலீட்டா ளராக உள்ளது. அதானி குழுமத்தின் 8 சதவிகித பங்குகள் எல்ஐசி-யிடம் உள்ளது. இதனால், அதானி குழு மத்திற்கு ஏற்படும் நஷ்டம், எல்ஐசி-யின் முதலீடுகளையும் பாதிக்கும் என்பதால், எல்ஐசி நிறுவனம் இந்த விஷயத்தில் வாடிக்கையாளர்களுக்கு உரிய நம்பிக்கை அளிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில், “பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தின் அதிகாரிகள் அதானி குழுமத்தின் உயர் நிர்வாகத்து டன் ஒரு கூட்டத்தை நடத்தி ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து விளக்கம் பெறுவார்கள்” என்று ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) தலைவர் எம்.ஆர். குமார் தெரிவித்துள்ளார். “எங்கள் முதலீட்டாளர்கள் குழு ஏற்கெனவே அதானி குழுமத்திடம் விளக்கம் கேட்டுள்ள நிலையில், எங்கள் உயர்மட்ட நிர்வாகமும் அதானி குழும நிர்வாகிகளிடம் திரும்ப விளக்கம் கேட்க உள்ளோம். விரைவில் அவர்களை சந்தித்து விளக்கம் கேட்போம். அந்நிறுவனத்தில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் புரிந்து கொள்ள விரும்புகிறோம்” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள் ளார்.