புதுதில்லி, மே 19 - கியான்வாபி மசூதியில் இருந்த லிங்கம் போன்ற வடிவம், எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்பதைக் கண்டறிய, ‘கார்பன் டேட்டிங்’ சோதனை நடத்துவதற்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், வார ணாசியில் காசி விஸ்வநாதர் கோயி லை ஒட்டியபடி கியான்வாபி மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதியின் சுற்றுச் சுவரில் சிங்காரக் கவுரி அம்மன் என்ற இந்துக் கடவுளின் சிலை உள்ளது. இந்த அம்மனுக்கு ஆண்டுக் கொரு முறை இந்துக்கள் வழிபாடு நடத்துவதும் நடைமுறையில் உள்ளது. ஆனால், முகலாய பேரரசர் அவு ரங்கசீப், சுமார் 325 ஆண்டுகளுக்கு முன்னர் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்துத்தான் கியான்வாபி மசூதி யைக் கட்டியதாகவும், எனவே, மசூதி வளாகத்திலுள்ள சிங்காரக் கவுரி அம்மனை தினமும் வழிபட அனுமதி வழங்க வேண்டும் என்று அண்மை யில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இதையொட்டி, கோயிலை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டதா? என்பதை அறியவும், கோயிலின் எச்சங்கள் மசூதிக்குள் உள்ளதா? என்பதை கள ஆய்வு மூலம் கண்டறி யவும் வாரணாசி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டது. கள ஆய்வும் நடத்தப்பட்டது. அதன் முடிவில் அங்குள்ள மசூதியிலுள்ள ஒசுகானாவின் நடுவில் இருந்த அமைப்பை சிவலிங்கம் என்று ஆய்வுக் குழுவில் இடம்பெற்ற இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கதை கட்டினார். ஆய்வு முடிவை நீதிமன்றத் தில் தாக்கல் செய்வதற்கு முன்பே, சிவ லிங்கம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள தாக ஊடகங்களில் பரப்பினார்.
இதையே ஒரு ஆதாரமாக காட்டி, லிங்கம் போன்ற வடிவத்தின் பழமை யை அறிய கார்பன் டேட்டிங் முறையில் பரிசோதனை செய்ய வேண்டுமென 5 இந்து பெண்கள் கோரிக்கை விடுத்த னர். மசூதிக்குள் இந்துக் கடவுளரின் மேலும் பல சிலைகள் இருப்பதாக வும் அவர்கள் கூறினர். ஆனால், மசூதிக்கு உள்ளே வருவ தற்கு முன்னர் கை, கால்களை கழுவ ஒரு நீரூற்று இருந்தது என்றும், ஆய்வு நடத்தியவர்கள் அதைத்தான் லிங்கம் போன்ற வடிவம் என கூறுகிறார்கள் என்றும் மசூதி நிர்வா கத்தினர் விளக்கம் அளித்தனர். வார ணாசி நீதிமன்றமும், கியான்வாபி மசூ தியில் சிவலிங்கம் இருந்ததற்கான அறி வியல்பூர்வ ஆதாரமில்லை என்று கூறியது. இதனை ஏற்காத இந்துப் பெண் கள், அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடினர். வழக்கை விசாரித்த அலகா பாத் உயர் நீதிமன்றம் கார்பன் டேட்டிங் நடத்த அனுமதியளித்தது. இது மசூதி நிர்வாகத்திற்கு அதிர்ச்சியை அளித்த நிலையில், அவர்கள், அலகாபாத் உயர் நீதிமன்றத் தின் உத்தரவிற்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த னர். இந்த மேல்முறையீட்டு மனு, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மன், கே.வி. விஸ்வநாதன் ஆகி யோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக் கிழமையன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கியான்வாபி மசூதி வளாகத்தில் இருந்த லிங்கம் போன்ற அமைப்பை கார்பன் டேட்டிங் செய்ய உத்தரவிட்ட அலகாபாத் உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பிற்கு உச்ச நீதி மன்ற நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய் யுமாறு, ஒன்றிய - மாநில அரசுகள் மற்றும் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையும் ஒத்திவைத்தனர்.