states

2023 பிப்ரவரியில் 25 சதவிகிதம் வரை அதிகரித்த மருந்து, மாத்திரை விற்பனை!

புதுதில்லி, மார்ச் 9 - கடுமையான இருமல், சளி, காய்ச்சல் நோய்த்தொற்று போன்ற கார ணங்களால், இந்தியாவில் கடந்த பிப்ர வரி மாதத்தில் மருந்து, மாத்திரை களின் விற்பனை 20 முதல் 25 சதவிகிதம் வரை அதிகரித்ததாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, காய்ச்சல் மருந்து களான பாரசிட்டமால், அசித்ரோமை சின் மற்றும் இருமல் சிரப்களின் விற்பனை மிகப்பெரிய அளவிற்கு விற்பனையாகி உள்ளது. இந்தியா முழுவதும், புளூ காய்ச்சலுடன் எச்1 என்1 எனும் ஒரு வகை இன்புளூயென்சா வைரஸ்  கிருமித் தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. காய்ச்சல், உடல்வலி, தலை வலி, சளி, தொண்டை வலி மற்றும் இரு மல் போன்றவற்றால் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். சிலருக்கு குறிப்பிட்ட இடைவெளியில் வறட்டு இருமல் உள் ளது. தொற்றிலிருந்து மீண்ட பிறகும் கூட தொடர்ந்து இருமல் உள்ளது.  இவைதான், காய்ச்சல் மற்றும் சுவாச நோய்த்தொற்றுகளின் அதி கரிப்பு காரணமாக நுண்ணுயிர் எதிர்ப்பி கள், இருமல் மருந்துகள் மற்றும் தொற்று எதிர்ப்பு மருந்துகளின் விற்ப னையில் ஒரு வேகத்தை ஏற்படுத்தி யுள்ளதாக கூறப்படுகிறது.  அதாவது, கடுமையான இருமல், சளி, காய்ச்சல் நோய்த்தொற்றுகளால், பிப்ரவரி மாதத்தில் மருந்துகளின் விற்பனை 20 முதல் 25 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. காய்ச்சல் மருந்துகளான பாரசிட்டமால், அசித்ரோமைசின் மற்றும் இருமல் சிரப்களின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.

2023 பிப்ரவரியில், நோய்த் தொற்று  எதிர்ப்பு மருந்து விற்பனை 12.5 சத விகிதம் அதிகரித்து, அதன் மொத்த வர்த்தகம் ரூ. 22 ஆயிரத்து 883  கோடி யாக இருந்துள்ளது. இதேபோல சுவாச மருந்துகள் 8.1 சதவிகிதம் அதி கரித்து ரூ. 14 ஆயிரத்து 880  கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெற்றுள் ளது. நோய் எதிர்ப்பு சக்தி  அளிக்கக் கூடிய மருந்துகள் விற்பனை 26.1 சத விகிதம் அதிகரித்து, அவற்றின் வர்த்த கம் ரூ. 2 ஆயிரத்து 766 கோடியாக உயந்துள்ளது. நுரையீரலில் வீக்கத்தைத் தடுக்கப் பயன்படும் சிப்லா வின் புட்கார்ட் விற்பனை 23.3 சத விகிதம் அதிகரித்து, அதன் வர்த்தகம் ரூ. 2 ஆயிரத்து 385 கோடியாக இருந்துள் ளது. வலி நிவாரணி மருந்துகள் விற்ப னையும் 10.7 சதவிகிதம் அளவிற்கு அதி கரித்து ரூ. 12 ஆயிரத்து 898 கோடி அள விற்கான வர்த்தகமாக இருந்துள்ளது. இன்புளூயென்சா வைரஸ் மூலம் பரவிய காய்ச்சல் 6 நாட்கள் வரை இருக்கும். உரிய சிகிச்சை மூலம் இதனை குணப்படுத்தி விடலாம். புளூ  காய்ச்சல் நுரையீரலை பாதிக்கக்கூடி யது. 2 முதல் 6 நாட்கள் வரை காய்ச்சல்  நீடிக்கும். சளி, உடல் வலி, தலைவலி, இருமல், தொண்டை கரகரப்பு போன்ற  பிரச்சனைகள் ஏற்படும். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பாதிப்பு ஒரே  மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால் குழந்தைகளுக்கு நிமோனியா எனப் படும் உடலில் நீர் இழப்பு மற்றும் நீர்  பற்றாக்குறை அதிகமாக ஏற்பட்டால் காய்ச்சல் வந்தவுடன் தாமதிக்காமல் உரிய மருத்துவரை அணுக வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக, புளூ காய்ச்சல் வராமல் தடுப்ப தற்கு பொதுவாக கை, கால்களை எப் போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் முதல் பெரிய வர்கள் வரை தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். நன்கு  சூடாக காய்ச்சி ஆற வைத்த தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும். சூடான உணவுகளை சாப்பிட வேண்டும். காய்கறி சூப், அசைவ சூப் சாப்பிட லாம். வெளியிடங்களுக்கு செல்லும் போது சமூக இடைவெளியை கடைப் பிடிக்க வேண்டும். காய்ச்சல் இருந்தால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க ஒரு லிட்டர் தண்ணீரில் நான்கு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் உப்பு கலந்து குடிக்கலாம். இதனால் உடலில் நீர் இழப்பு ஏற்படுவதை தடுக்கலாம் என் றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.