மோடி அரசின் பிரம்மாண்ட ஊழல் திட்டமான தேர் தல் பத்திர திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. இந்நிலையில், அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகளை வைத்து மிரட்டி தொழில் நிறுவனங்களி டம் கோடிக்கணக்கில் பாஜக (ரூ.6000 கோடிக்கும் அதிகமாக) வாரி சுருட்டி யது அம்பலமாகியுள்ளது. முக்கியமாக தேர்தல் பத்திரம் தொடர்பாக ஒவ் வொரு நாளும், பல்வேறு முறைகேடு கள், வெளியாகி வருகின்றன. இந் நிலையில், தற்போது காலாவதியான தேர்தல் பத்திரங்களை கூட சட்ட விரோ தமாக ஒன்றிய பாஜக அரசு பணமாக்கி இருப்பதாக பிரபல புலனாய்வு ஊட கமான ‘ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்’ பர பரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தேர்தல் பத்திர விதிகள் படி நன்கொடை பத்திரத்தை பெற்ற கட்சி கள் 15 நாட்களுக்குள் அதை வங்கியில் செலுத்தி பணமாக்கிக்கொள்ள வேண்டும் என்பது விதியாக உள்ளது. ஆனால் கடந்த 2018 மே மாதம் தில்லி யில் உள்ள எஸ்பிஐ வங்கியில் காலாவதி யான ரூ.10 கோடி மதிப்புள்ள பத்திரங் களை சட்டவிரோதமாக பணமாக்கி யுள்ளது பாஜக. அருண்ஜெட்லியின் அழுத்தம் இதற்கு ஒன்றிய நிதியமைச்சகம் உதவியுள்ளது. அதாவது அப்போதைய ஒன்றிய நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி தலைமையிலான நிதி அமைச்சகம் காலாவதியான பத்தி ரத்தை பணமாக்க எஸ்பிஐ வங்கிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்துள்ளது. ஆளும் பாஜகவின் அழுத்தம் கார ணமாக வேறு வழியில்லாமல் பத்திர விற்பனையில் உள்ள விதிகள் தளர்த் தப்பட்டு காலாவதியான பத்திரங்களை பணமாக்கியுள்ளது எஸ்பிஐ வங்கி. முக்கியமாக விதிகளை திருத்துவதற்கு ஒன்றிய நிதி அமைச்சகம் மின்னல் வேகத்தில் அனுமதி அளித்தது” என கூறப்பட்டுள்ளது.