புதுதில்லி, டிச. 16 - யார், யாரைத் திருமணம் செய்து கொள்கி றார்கள்.. பெற்றோரின் சம்மதத்துடன்தான் திரு மணம் நடக்கிறதா.. குடும்ப உறவு எப்படி இருக் கிறது..? என்பதையெல்லாம் கண்காணிக்கும் வேலையில், மகாராஷ்டிர மாநில பாஜக கூட்டணி அரசு இறங்கியுள்ளது. இதற்காக, மாநில பெண்கள் மற்றும் குழந்தை கள் மேம்பாட்டுத் துறை அமைச்சரும், பாஜக தலைவருமான மங்கள் பிரபாத் லோதா தலைமை யில், ‘கலப்புத் திருமண - குடும்ப ஒருங்கிணைப்புக் குழு’ என்ற பெயரில், 13 பேர் கொண்ட குழுவை அமைத்து, சாதி மற்றும் மதமறுப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியரின் விவரங்களை சேகரிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. தாய்வழி குடும்பத்தின் ஆதரவின்றி திருமணம் செய்துகொண்டு, அவர்களிடமிருந்து பிரிந்து வாழும் பெண்களைக் கண்டறிய சிறப்புப் படையை அமைக்குமாறு,
கடந்த நவம்பர் 19 அன்றே, மகாராஷ் டிர மாநில மகளிர் ஆணையருக்கு, அமைச்சர் லோதா உத்தரவிட்டார். இதன் அடுத்த கட்டமா கவே, அமைச்சர் லோதா தலைமையில் அரசு மற்றும் அரசு சாரா துறைகளைச் சேர்ந்த 13 பேர் கொண்ட கண்காணிப்புக்குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்தக்குழு பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத சாதி- மத மறுப்புத் திருமணங்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கும். மத வழி பாட்டுத் தலங்களில் நடத்த திருமணங்கள் குறித்து தகவல் பெறும். வீட்டை விட்டு வெளியேறி திரு மணம் செய்தவர்கள் குறித்தும் தகவல் பெறும். முத்திரைத்தாள் மற்றும் பதிவாளர் அலுவலகங்க ளில் இருந்து காதல் திருமணங்கள் செய்த தம்ப திகள் பற்றிய தகவல்களை சேகரிக்கும். அந்த தகவல்களில் இருந்து, புதிதாக திருமணமான பெண்களை கண்டறிந்து, அவர்களது தாய்வழி குடும்பங்களை தொடர்பு கொள்ளும். அவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருக்கிறார்களா என்பதைக் கண்டறியும். பெண்களின் தாய்வழி குடும்பங்கள் பிரிந்து இருக்கும் சந்தர்ப்பங்க ளில் அவர்களின் முகவரிகளைப் பெற்று, பெற் றோரைத் தொடர்புகொள்ளும், வேண்டு மென்றால் ஆலோசனைகளை (?) வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
தில்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வசாய் பகுதியைச் சேர்ந்த ஷ்ரத்தா வால்கர் அவரது காதலன் அப்தாப் பூனாவாலாவால் படு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்ப வத்தை தொடர்ந்து, ஷ்ரத்தா வால்கர் சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்கும் நோக்கிலேயே இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மங்கள் பிரபாத் லோதா தெரிவித்துள்ளார். “ஷ்ரத்தா வால்கரின் விஷயத்தில், அவர் ஆறு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார் என்பது அவரது குடும்பத்தினருக்கு (பெற்றோருக்கு) தெரியாது. இதை கேட்கவே பயமாக இருந் தது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடை பெறுவதை நாங்கள் விரும்பவில்லை. எனவே, விவாகரத்துக்குச் செல்லும் தம்பதிகள் ஒன்றாக வாழ்வதற்கான சாத்தியமான வழிகளை ஆராய்வ தற்கு நாங்கள் ஆலோசனை வழங்கவும், குடும் பத்தை விட்டுப் பிரிந்த பெண்களுக்கு மீண்டும் தங்களின் குடும்பத் தொடர்பைத் தொடரவும் ஆலோசனை வழங்குவோம்” என்றும் லோதா குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநில பாஜக கூட்டணி அரசின் இந்த கண்காணிப்புக்குழு முடிவுக்கு, மாநிலத்தி லுள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ளன. “இது, தேவையற்ற குழு” என்றும் “பிற்போக்கான நடவடிக்கை” என்றும், “மக்க ளின் தனிப்பட்ட வாழ்க்கையை உளவு பார்க்க ஏக்நாத் ஷிண்டே - தேவேந்திர பட்னாவிஸ் அரசுக்கு உரிமை இல்லை” என்றும் தேசியவாத காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. “மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலி ருந்து விலகி இருக்குமாறு மாநில அரசை கேட்டுக் கொள்வதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் அமைச்ச ருமான ஜிதேந்திர அவாத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் பதி விட்டிருக்கும் அவர், “சாதி-மத மறுப்புத் திரு மணங்களைத் தடுக்கும் இந்தக் ‘குப்பைக் குழு’ எதற்கு? யார் யாரை திருமணம் செய்து கொள்கி றார்கள் என்பதை உளவு பார்க்க, அரசாங்கம் யார்? தாராளவாத மனோபாவம் கொண்ட மகா ராஷ்டிராவில் இது ஒரு பிற்போக்கான முடிவு. குமட்டல் நடவடிக்கை. முற்போக்கான மகா ராஷ்டிரா தற்போது எந்த வழியில் செல்கிறது..? மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து விலகி இருங்கள்” என பதிவிட்டுள்ளார்.