states

img

‘‘ஆசியாவிலேயே மிகப்பெரிய தானியக்களஞ்சியம்’’

பாபநாசம், மார்ச் 29-     ‘‘சோழநாடு சோறுடைத்து’’ என்ற பழமொழிக்கு ஏற்ப ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டங்களில் முப்போகமும் நெல் சாகுபடியை விவசாயிகள் செய்து  வருகின்றனர். இப்பகுதிகளில், பஞ்சம் வரும் காலங் களில் பயன்படுத்துவதற்காக தானியங்களை, விதை களை சேமித்து வைக்கும் களஞ்சியங்கள் அமைக்கப்பட்டன. அந்தவகையில், 500 ஆண்டு களுக்கு முன்பு மிகப்பெரிய தானியக் களஞ்சியத்தை பாபநாசம் அருகே திருப்பாலத்துறையில் உள்ள பாலைவனநாதர் கோயிலில் அமைத்துள்ளனர். ஆசியாவிலேயே மிகப்பெரிய தானியக்களஞ்சியமாக கருதப்படும் இது 36 அடி உயரமும், 84 அடி சுற்றளவும் கொண்டது. இதன் அடிப்பகுதி வட்ட வடிவிலும், மேல்பகுதி கூம்பு வடிவிலும் கதவுகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.  இது தஞ்சை நாயக்க மன்னர் களின் வழி வந்த ரகுநாத நாயக்கரால் (கி.பி 1600 - 1634)  கட்டப்பட்டது. இதில் 3 ஆயிரம் கலம் தானியத்தை சேமிக்கலாம்.