states

img

இமாச்சலில் அதானி வில்மர் நிறுவனத்தில் ரெய்டு

சிம்லா, பிப். 9 - இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ‘அதானி வில்மர்’ நிறுவனத்தில், கலால்துறை, வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். ஜிஎஸ்டி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதானி வில்மர், அதன் சமையல் எண்ணெய்கள் மற்றும் சில உணவுப் பொருட்களை பார்ச்சூன் பிராண்டின் கீழ் விற்பனை செய்கின்றது. இது வணிக நிறுவனமான ‘அதானி குழு மம்’ மற்றும் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட ‘வில்மர்’ ஆகியவற்றின் கூட்டு நிறுவனமாகும். இந்நிலையில், ‘அதானி வில்மர்’, கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜிஎஸ்டி செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சா ட்டின் பேரில், அம்மாநில கலால்துறை, வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். அதிகாரிகள் வில்மர் நிறுவனத்திற்கு சென்று உரிய ஆவ ணங்களைச் சரிபார்த்ததாகவும், அப்போது பல ஆண்டுகளாக,  அதானி வில்மர் நிறுவனம் வசூலித்த ஜிஎஸ்டி  தொகையை செலுத்தத் தவறியது தெரியவந்துள்ளதாகவும் கூறப்படு கிறது. அதானி குழுமம் இமாச்சலப் பிர தேசத்தில் பழங்களுக்கான குளிர்பா னக் கடைகளில் இருந்து மளிகைப் பொருட்கள் விநியோகம் வரை மொத் தம் ஏழு செயல்படும் நிறுவனங் களைக் கொண்டுள்ளது. பார்ச்சூன் பிராண்டின் கீழ் அதன் சமையல் எண்ணெய்கள் மற்றும் பிற உணவுப் பொருட்களை விற்பனை செய்கிறது. இமாச்சலப்பிரதேசத்தில் சரக்குக் கட்டணங்கள் திருத்தப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு இயங்கி வந்த இரண்டு சிமெண்ட் ஆலைகளை  அதானி குழுமம் அண்மையில் மூடிவிட்டது. இதனால், அதானி குழுமத்துக்கும், சரக்கு லாரி உரிமையாளர்களுக்கும் இடையே அண்மையில் கடுமையான மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.