states

img

பாஜக-வை வீழ்த்த அம்பேத்கர்வாதிகளும் சமாஜ்வாதிகளும் இணைவது அவசியம்!

லக்னோ, பிப். 4 - சமாஜ்வாதி கூட்டணியில் பகு ஜன் சமாஜ் கட்சி இணைய வேண்டும் என்று உ.பி. முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி தலைவ ருமான அகிலேஷ் சூசகமாக அழைப்பு விடுத்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் பாஜக, அப்னாதளம் உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாகவும், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சிகள் மற்றொரு அணியாகவும் போட்டி யிடுகின்றன. இந்த இரு அணி கள் தவிர, மாயாவதி தலைமை யிலான பகுஜன் சமாஜ் கட்சியும், காங்கிரசும் தனித்தனியே போட்டியிடுகின்றன. இந்நிலையில்தான், ‘மாயா வதியின் பகுஜன் சமாஜ் கட்சி யால் சமாஜ்வாதி - ஆர்எல்டி  கூட்டணியின் வெற்றி பாதிக் குமா?’ என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘‘அம் பேத்கர் கொள்கையை பின்பற்று கிறவர்களும், சமாஜ்வாதியின ரும் ஒன்றுதான். அவர்கள் கூட் டணி சேர வேண்டும் என ஏற் கெனவே பலமுறை வலியுறுத்தி உள்ளேன். நாட்டின் அரசியல்  சட்டத்தையும், ஜனநாயகத்தை யும் காப்பாற்ற அம்பேத்கர் ஆதர வாளர்களும், சமாஜ்வாதியின ரும் உடனே இணைவது அவசியம்’’ என்று அகிலேஷ் பதி லளித்துள்ளார். இது பகுஜன் சமாஜ் கட்சியுட னான கூட்டணிக்கு அகிலேஷ் விடுத்த நேரடி அழைப்பாகவே பார்க்கப்படுகிறது. இந்த அழைப்பை ஏற்று, ஒருவேளை பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதியுடன் கைகோர்க்கும் பட்சத்தில், உ.பி.யில் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற பாஜக கனவு உடைந்து சுக்கு நூறாகி விடும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.  ஆனால், அகிலேஷின் இந்த அழைப்புக்கு மாயாவதி பதில் எதுவும் தெரிவிக்கவில்லை.