states

img

தனியார் மருத்துவமனைகளின் பகற் கொள்ளை தடுத்திட உரிய நடவடிக்கைகள் தேவை

புதுதில்லி தனியார் மருத்துவமனைகள் மக்களிடம் அதீதமாக கட்ட ணங்களை வசூலிப்பதைத் தடுத்து நிறுத்திட உரிய நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஜன் ஸ்வத்யா அபியான் (Jan Swasthya Abhiyan) என்னும் மக்கள் சுகாதார இயக்கம் அறை கூவல் விடுத்துள்ளது. வறுமை நிலையில்  13 கோடி பேர் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று, இந்தியாவில் 12 கோடியே 90 லட்சம் மக்கள் கடும் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டி ருக்கிறார்கள் என்று கூறுகிறது. இதன் பொருள் இக்குடும்பத்தினருக்கு நாளொன்றுக்கு 180 ரூபாய்க்கும் குறைவாகவே வருமானம் வரு கிறது. ஒன்றிய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் நிதி ஆயோக் அமைப் பும்கூட இந்தியாவில் சுமார் பத்து கோடி மக்கள் அல்லது இந்தியா வின் மக்கள் தொகையில் 7 விழுக் காட்டினர் மருத்துவச் செலவினங்க ளின் காரணமாக வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர் என்று குறிப்பிட்டிருக்கிறது. தற்போது உள்ள நிலைமை யின்படி இந்தியாவில் இயங்கி டும் பெரும்பாலான தனியார் மருத்து வமனைகளில் நோயாளிகளிடம் பல்வேறு வடிவங்களில் பணம் பறிக்கப்படுகிறது. இவற்றை முறைப் படுத்துவதற்கான அரசு அமைப்பு எதுவும் இல்லை என்றே கூறலாம். தனியார் மருத்துவமனைகள் நோயா ளிகளிடம் அதீதமாக  பல்வேறு பெயர்களில் கட்டணங்கள் வசூலிப்ப தன் காரணமாக லட்சக்கணக் கான குடும்பங்கள் பொருளா தார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டி ருக்கின்றன என்று மேற்படி மக்கள் சுகாதார இயக்கம் தெரிவிக்கிறது. உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் தி கிளினிக்கல் எஸ்டபிள்ஸ் மெண்ட் ஆக்ட் என்று 2010இல் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும், இந்தச் சட்டத்தின் கீழ் நாட்டில் இயங்கிவரும் தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் இதன்கீழ் முறையாக கொண்டு வரப் பட்டிருப்பதாகச் சொல்ல முடியாது. இந்த நிலைமையை மாற்றிய மைப்பதற்காக மக்கள் சுகாதார இயக்கம் சார்பாக பொதுநல மனு ஒன்று உச்சநீதிமன்றத்தில் 2021ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் நாட்டில் இயங்கும் தனியார் மருத்துவமனைகள் அனை த்தும் 20 அம்சங்கள் கொண்ட நோயாளிகளின் உரிமைகள் சாச னத்தை அமல்படுத்திட உச்சநீதி மன்றம் ஆணை பிறப்பித்திட வேண்டும் என்று கோரியிருக்கிறது. மருத்துவமனைகள் வசூலித்திடும் கட்டணங்கள் அனைவரும் அறியும் வண்ணம் பொது இடத்தில் விளம் பரப்படுத்த வேண்டும் என்றும் கோரி யிருக்கிறது. (ந.நி.)