states

இமயமலை சாமியாரின் சொல்படி நடவடிக்கை தேசிய பங்கு சந்தை முன்னாள் நிர்வாக இயக்குநருக்கு தடை - ரூ.3 கோடி அபராதம்

புதுதில்லி,பிப்.13- தேசிய பங்கு சந்தை ( NSE) நிறுவனர் களில் ஒருவராகவும், நிர்வாக இயக்குன ராகவும் இருந்தவர்  சித்ரா ராமகிருஷ்ணா. இவர் நிர்வாக இயக்குனராக இருந்த 2013 முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான நட வடிக்கைகள் குறித்து பல்வேறு சர்ச்சை கள் எழுந்தன.இதையடுத்து பங்கு வர்த்த னை வாரியமான செபி விசாரணை மேற்கொண்டது.  இதில், பங்கு சந்தையின் முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளை அடையாளம் தெரியாத சாமியாரின் ஆலோசனைப்படி சித்ரா ராம கிருஷ்ணா எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது. இமயமலையில் இருப்பதாக கூறப்படும் அந்த சாமியாரின் ரிக், யஜூர், சாம என்ற 3 வேதங்களின் பெயரில் அமைந்துள்ள இ-மெயில் கணக்கிற்கு பங்குச்சந்தை நிர்வாகம் தொடர்பான தகவல்களை அனுப்பி வந்துள்ளார். அதே மெயில் கணக்கில் இருந்து ஆலோசனை கிடைத்த பின் அதன்படி சித்ரா  ராமகிருஷ்ணா முடிவுகள் எடுத்து வந்துள்ள தாக செபி தெரிவித்துள்ளது.  சாமியாரின் வழிகாட்டுதல் படி 2013 ஆம் ஆண்டின் என்எஸ்இ  ஆலோசகராக நியமிக்கப்பட்ட ஆனந்த் சுப்பிரமணியனுக்கு அடுத்தடுத்து 3 சம்பள உயர்வு அளித்து 4 கோடி ரூபாய் சம்பளம் வழங்கியதாகவும் செபி குற்றம் சாட்டியது. இதை தொடர்ந்து சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.3 கோடியும், ஆனந்த் சுப்பிரமணியனுக்கு ரூ.2 கோடியும் செபி அபராதம் விதித்தது. இருவரும் 3 ஆண்டு களுக்கு பங்குச்சந்தை நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.