புதுதில்லி, ஜூன் 20 - மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் நீடிக்க வேண்டும் என்பதுதான் பாஜக-வின் விருப்ப மாக உள்ளது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செய லாளர் கே.சி. வேணுகோபால் இதுதொடர் பாக தமது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்ப தாவது: “மணிப்பூர் மாநிலம் 49 நாட்களாக எரிகிறது. பிரதமர் மோடி இது குறித்து ஒரு வார்த்தை கூட கூறாமல், 50-ஆவது நாளில் வெளிநாட்டுப்பயணம் மேற்கொள்கிறார். மாநிலத்தில் நூற்றுக்கணக்கானோர் மாண்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடிழந்திருக்கின்றனர். எண்ணற்ற தேவா லயங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்பட்டு உள்ளன. நிலைமை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இந்த கலவரம் மிசோரம் மாநிலத்திலும் பரவத் தொடங்கி உள்ளது. இதில், பிரதமரைத் தலையிட வலி யுறுத்துவதற்காக அவரை சந்திக்கக் கடந்த பல நாட்களாக மணிப்பூர்தலைவர்கள் நேரம் கேட்டும் இன்னும் ஒதுக்கப்படவில்லை. மணிப்பூர் விவகாரத்தில் மக்களின் குரல் ஒவ்வொரு நாளும் புறக்கணிக்கப்படுவது, மோடியும், பாஜகவும் மோதலை நீடிக்க விரும்புவதையே காட்டுகிறது. இதில் தீர்வு காண பாஜக விரும்பவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. தன்னைத்தானே விஸ்வகுரு எனக் கூறிக்கொள்பவர், மணிப்பூரின் குரலுக்கு எப்போது செவிமடுப்பார்? அவர் (பிரதமர் மோடி) எப்போது நாட்டுக்கு அமைதிக்கான எளிய அழைப்பு விடுப்பார்? அமைதியை ஏற்படுத்துவதில் தோல்வியடைந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் மற்றும் மணிப்பூர் முதல்வரிடம் எப்போது அவர் கேள்வி எழுப்புவார்?” இவ்வாறு கே.சி. வேணுகோபால் கேள்வி எழுப்பியுள்ளார்.