தஞ்சாவூர், ஏப்.2- கேரளம் மாநிலம் திருச்சூரி லிருந்து இருந்து வேளாங்கண் ணிக்கு வந்துகொண்டிருந்த சுற்றுலாப் பேருந்து கட்டுப் பாட்டை இழந்து, கவிழ்ந்து சாலையோரத்தில் மோதி விபத் திற்குள்ளானதில் பேருந்தில் பயணம் செய்த சிறுவன், மூதாட்டி இருவர் பலியாகி னார். 40 பேர் காயமடைந்தனர். கேரளம் மாநிலம் திருச்சூர் மாவட்டம் நெல்லிக்குன்னம் பகுதியைச் சேர்ந்தவர்கள் 47 பேர் வேளாங்கண்ணி சுற் றுலா வந்துள்ளனர். இவர்களு டன் இரு பேருந்து ஓட்டுநர்கள், இரு வழிகாட்டிகளும் வந்துள் ளனர். சனிக்கிழமை இரவு திருச்சூர் மாவட்டத்திலிருந்து புறப்பட்ட ஆம்னி சமீர் என்ப வர் இயக்கியுள்ளார். பேருந்து ஞாயிற்றுக் கிழமை அதிகாலை சுமார் 5:15 மணியளவில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா ஒக்கநாடு கீழையூர் பகுதியில் உள்ள சாலை வளைவில் திரும் பிய போது ஓட்டுநரின் கட்டுப் பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அலறல் கேட்டு, ஊராட்சி மன்றத் தலைவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட் டச் செயற்குழு உறுப்பினர் என்.சுரேஷ்குமார் உள்ளிட்ட கிராம மக்கள் ஓடோடி வந்து காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தகவல றிந்து காவல்துறை, தீய ணைப்பு மற்றும் மீட்புத்துறை யினர் மீட்பு நடவடிக்கை களைத் தொடர்ந்தனர்.
இந்த விபத்தில் திருச்சூர் அருகே உள்ள நெல்லிக்குன் னம் பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் வர்கீஸ் மனைவி லில்லி (63), ஜோஸ் மகன் ஜெரால்டு ஜிம்மி (9) ஆகியோர் சம்பவ இடத்தி லேயே பலியாயினர். இருவ ரது உடல்களும் உடற்கூராய் விற்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காயமடைந்தவர்களில் 32 பேர் மன்னார்குடி அரசு மருத்து வமனையிலும், 6 பேர் தஞ்சாவூ ரில் உள்ள தனியார் மருத்துவ மனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த மெர்சி (54), அஜித் (24) ஆகி யோர் தஞ்சாவூர் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனை யில் சிகிச்சை பெற்றுவருகின்ற னர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், கடும் காயம டைந்தவர்களுக்கு தலா ஐம்ப தாயிரம் ரூபாயும் முதலமைச்ச ரின் பொது நிவாரண நிதியிலி ருந்து வழங்க தமிழ்நாடு முதல் வர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார்.