புதுதில்லி, மார்ச் 22- மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மெகுல் சோக்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி வரை கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல், கடந்த 2018-ஆம் ஆண்டு நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக உள்ளார். அப்போதைய காலகட்டத்தில் அவர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டறிய இன்டர்போல் தலைமையகத்தில் இருந்து மெகுல் சோக்சிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் விடப்பட்டு இருந்தது. இன்டர்போல் ரெட் கார்னர் விதித்து தனியாக தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டா லும், கரீபியன் நாடான ஆன்டிகுவாவில் மெகுல் சோக்சி தஞ்சமடைந்து ஆன்டிகுவா மற்றும் பர்புடாவில் குடியுரிமை பெற்றார். மெகுல் சோக்சி ஆன்டிகுவாவில் இருப்பது தெரிய வந்ததும் இந்திய விசாரணை அமை ப்புகளான சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அவரை நாடு கடத்தி கைது செய்யும் நடவடிக்கை களில் இறங்கின. இதனை முன்கூட்டியே அறிந்த மெகுல் சோக்சி குடியுரிமை மூலம் ஆன்டிகுவா உயர்நீதிமன்றத்தில் சிபிஐ, அம லாக்கத்துறைக்கு எதிராக வழக்கு தொடுத்து, இந்திய அரசின் நாடு கடத்தும் செயல்பாடு களை 5 ஆண்டுகளாக தடுத்து வருகிறார். கடந்த கால வழக்கு விசாரணையில் மெகுல் சோக்சி ஆன்டிகுவா உயர்நீதிமன்றத்தில், “இந்திய அரசு கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் திட்டமிட்டு டொமினிக் ரிபப்ளிக்கிற்கு கடத்தி சித்ரவதை செய்தது” எனக் கூறினார். மேலும் இன்டர்போலிடம், “இந்தியாவிற்கு நாடு கடத்தும் நோக்கத்துடன் நான் ஆன்டி குவாவிலிருந்து டொமினிக் ரிபப்ளிக்கிற்கு கடத்தப்பட்டேன். இந்தியாவுக்குத் திரும்பினால் தான் சிகிச்சை பெற முடியாது என்றும் நியாய மான விசாரணை நடத்தப்படாது” எனக்கூறினார். இதுதொடர்பாக ஆன்டிகுவா போலீசாரிடம் இன்டர்போல் விசாரணை நடத்திய நிலையில்,
மெகுல் சோக்சி மீதான ரெட் கார்னர் நோட்டீசை நீக்குவதாக இன்டர்போல் அறிவித்துள்ளது. இன்டர்போலின் இந்த உத்தரவு இந்திய அர சுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. காரணம் இனிமேல் மெகுல் சோக்சி எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் செல்லலாம். மேலும் இன்டர்போலின் உதவி இருந்தால் மட்டுமே வரும் காலங்களில் மெகுல் சோக்சி எங்கு இருக்கிறார் என கண்டறிய முடியும். இன்டர்போல் இந்திய அரசை கைவிட்ட நிலையில், இனி மெகுல் சோக்சி விவகாரத்தில் என்ன நடவடிக்கை மூலம் அவரை நாடுகடத்தி இந்திய அரசு கைது செய்ய போகிறது என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. இன்டர்போலுக்கு எதிராக இந்திய அரசு வழக்கு? மெகுல் சோக்சியின் ரெட் கார்னர் நோட்டீஸ் வாபஸ் பெற்றதையடுத்து இந்திய அரசு தரப்பில் இன்டர்போலுக்கு எதிராக வழக்கு தொடர இருப்ப தாக செய்தி வெளியாகியுள்ளது. வெளியுற வுத்துறை மூலம் தங்களுக்கு எதிராக தொட ரப்பட்டுள்ள வழக்குகளை எதிர்கொள்ளவும் சிபிஐ, அமலாக்கத்துறை அமைப்புகள் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி யுள்ளது. குற்றவியல் கண்காணிப்பு காவல் அமைப்பான இன்டர்போல், சர்வதேச அமை ப்பாகும். பிரான்ஸ் நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இன்டர்போல் உலகளாவிய போலீஸ் ஒத்துழைப்பு மற்றும் குற்றங்களை கட்டுப்படுத்த உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.