கடந்த 2 ஆண்டுகளில் 4,484 விசாரணைக் கைதிகள் உயிரிழந்ததாக ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கடந்த 2020-21ஆம் ஆண்டில் நாடு முழுவதும் காவல்துறையினரால் விசாரணைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களில் 1940 உயிரிழந்த நிலையில், 2021-22ஆம் ஆண்டில் இது 2544ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக பாஜக ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 501 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் 2020-21ஆம் ஆண்டில் 63 பேர் உயிரிழந்த நிலையில், 2021-22ஆம் ஆண்டில் 109ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.